Skip to main content

'எஸ்.பி.பி. புதுசா டயர் ஃபேக்டரி வச்சிருக்காப்ல' -எம்.ஜி.ஆர். முன் கிண்டல் செய்த கங்கை அமரன்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
spb vintage

 

 

‘பாடும் நிலா’ எஸ்.பி.பியின் நீண்ட கால நண்பரான கங்கை அமரன், தனது ’பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ நூலில் பகிர்ந்த நினைவுகளில் ஒரு பகுதி...

 

”என் பையன் வெங்கட்பிரபுவோட மிருதங்க அரங்கேற்றத்துக்கு வர்றதா சொல்லீட்டார் எம்.ஜி.ஆர். "உடல்நலமில்லாத அவர் விழாவுக்கு வந்து சிரமப்பட வேணாமே'னு நினைச்ச நான் அவரோட ஆசிர்வாதத்துக்காக தகவலா சொன்னேன். அழைப்பிதழ்லாம் அடிச்சாச்சு. தெய்வாதீனமா அழைப்பிதழ்ல ஒரு கேப் இருந்தது. ’புரட்சித்தலைவர் மக்கள் திலகம் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அவர்களின் முன்னிலையில்'னு அந்த கேப்ல பிரிண்ட் பண்ணியாச்சு. அழைப்பிதழ் பார்த்த அமைச்சர்கள் ப.உ.ச., ஹண்டே, க.ராசாராம் மூணு பேரும் டென்ஷனாயிட்டாங்க. "அட முட்டாப்பயலே... என்னாடா இது இன்விடேஷன். சி.எம்.மோட படம் போடல. ஏதோ அவர் பேர இன்செர்ட் பண்ணீருக்க. ஒரு முதலமைச்சருக்கு குடுக்கிற மரியாதையா இது?''னு சத்தம் போட்டாங்க. "பத்திரிக்கை அடிச்சு முடிச்ச பின்னாடி தலைவருக்கு ஒரு தகவலாத்தான் சொன்னேன். அவர் விழாவுக்கு வர்றம்னுட்டார். எனக்கு வேற வழி தெரியல. நான் அவர் மேல உண்மையான அன்பு வச்சிருக்கேன். அந்த அன்புக்கு மரியாத குடுத்து அவர் விழாவுக்கு வந்தாலும் சந்தோஷம். வரலேன்னாலும் வருத்தமில்ல. நான் தலைவர்கிட்டருந்து வேற எதையும் எதிர்பார்க்கல''னு சொன்னேன். நான் என் மனைவி புள்ளைகளோட அழைப்பிதழை எடுத்துக்கிட்டு தலைவரைப் பார்க்க தோட்டத்துக்கு போனேன். எங்கள சாப்பிட வச்சார், பத்திரிகைய வாங்கிப் பார்த்தார். அதிகமா பேச முடியல அவரால. ’நான் வந்துடுறேன்'கிற மாதிரி சைகை செஞ்சார். தலைவருக்கு இருந்த உடல்நிலையை பார்த்த நான் ’தலைவர் விழாவுக்கு வரமாட்டார்'னு நினைச்சேன்.

 

24.11.1987 மியூஸிக் அகாடமியில விழா ஏற்பாடுகள செஞ்சுக்கிட்டிருக்கோம். "தலைவர் இருக்க சூழ்நிலைல விழாவுக்கு வரமாட்டாரு. இவன் பைத்தியக்காரத்தனமா தலைவரோட முன்னிலைல விழா நடக்குது போட்டிருக்கான்”னு என் காதுபடவே பலரும் பேசினாங்க. விழா அரங்கத்துக்கு ரஜினி, கமல், எஸ்.பி. பாலசுப்பிரமணியம்னு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்து குவிஞ்சிட்டாங்க. திடீர்னு மோப்ப நாய்களைக் கொண்டு வந்து அரங்கத்த சோதிச்சாங்க போலீஸார். அப்பத்தான் தலைவர் வர்றது உறுதியாச்சு. தலைவர் சரியான நேரத்துக்கு வந்துட்டார். முன் வரிசையில் தலைவர் உட்கார்ந்தார். பக்கத்துல ராஜாண்ணனை உட்கார வச்சேன். பிரபலங்கள் வந்து தலைவருக்கு வணக்கம் வச்சிட்டுப் போனாங்க. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைவரோட ’அடிமைப்பெண்' படத்துலதான் அறிமுகமானார். இருந்தாலும் "டேய் அமரு... சி.எம்.கிட்ட என்னை அறிமுகப் படுத்திவைடா''னு சொல்ல... நான் அவனை கூட்டிக்கொண்டுபோய் தலைவரிடம் "தலைவரே... எஸ்.பி.பாலசுப்பிரமணியம்''னு சொன்னேன். "ஆ...ங்... தெர்து... தெர்து'' என்றபடி பாலுவின் கையப் பிடிச்சார். "பாலு புதுசா ஒரு டயர் ஃபேக்டரி ஆரம்பிச்சிருக்காப்ல''னு நான் சொன்னேன். உடனே தலைவர் "ங்க...?''னு கேட்டார். நான் எஸ்.பி.பி.யோட இடுப்பைச்சுத்தி சதை போட்டிருந்ததை பிடிச்சுக் காண்பிக்க... தலைவர் சிரிச்சபடி என் முதுகுல செல்லமா ஒரு அடி போட்டார். விழா ஆரம்பிச்சது.” 

இன்னும் பல நினைவுகள், சுவாரசியங்கள்... கிண்டிலில் படித்து மகிழ க்ளிக் செய்யுங்கள்...

பண்ணைப்புரம்

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“மன்னிப்பு கேட்க வேண்டும்” - இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி. மகன் நோட்டீஸ்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
SPB al issue sp charan send legal notice to music diector

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அரங்கேறி வருகிறது. ராஷ்மிகா, கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதே சமயம் மறைந்த பாடகரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் கொண்டு வந்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான், லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் குரல்களை, 'திமிறி எழுடா' பாடலில் பயன்படுத்தியிருந்தார். 

அவர்களின் குரலை ஏ.ஐ. மூலம் பயன்படுத்தியதற்காக, அவர்களின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அதற்குத் தகுந்த சன்மானமும் கொடுத்துள்ளோம் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலை ஏ.ஐ. மூலம் ‘கீடா கோலா’ என்ற தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக ஒரு பேட்டியிலும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எஸ்.பி.பி குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் அனுப்பியுள்ளார். 

அவர் நோட்டீசில் குறிப்பிட்டிருப்பதாவது, “எந்தவொரு தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பயனளிக்க வேண்டுமே தவிர வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இது எங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம். முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.