Skip to main content

போஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
mulan

 

 

கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பல நாடுகளில் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே இந்த காலகட்டத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படங்கள் ரிலீஸாகாமல் ஒத்திவைக்கப்படுகின்றன அல்லது ஓடிடியில் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் டிஸ்னி நிறுவனம் பெரும் செலவில் தயாரித்த முலன் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

 

கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான 'முலன்' சில மாதங்களுக்கு முன்பே திரையரங்கில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தலால் ரிலீஸாகவில்லை.

 

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட முலன் படம் எப்படியானாலும் திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், திடீரென டிஸ்னி நிறுவனம் ஓடிடியில் வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த படத்தை பார்க்க 29.99 டாலர்கள் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

 

 

இந்நிலையில், 'முலன்' திரைப்படத்துக்காக பல மாதங்களாக விளம்பரம் செய்து வந்த பிரான்ஸ் திரையரங்க உரிமையாளர் ஒருவர், இந்த முடிவால் ஆத்திரமடைந்து, தனது திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 'முலன்' விளம்பர போஸ்டரை அடித்து நொறுக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பத்து லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் ஃபேவரெட் படத்திற்கு 14 நாடுகளில் தடை

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Children's favorite film banned in 14 countries

 

ஹாலிவுட் திரையுலகில், அனிமேஷன் படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் மவுசு அதிகம். அந்த வகையில் 1995-ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'டாய் ஸ்டோரி' அனிமேஷன் படம் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து 'டாய் ஸ்டோரி' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. கடைசியாக இப்படத்தின் நான்காம் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. 

 

இதனிடையே 'டாய் ஸ்டோரி' படத்தில் இடம்பெற்ற 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரத்தை வைத்து உருவாகியுள்ள 'லைட் இயர்' படம் நேற்று (17.06.2022) வெளியானது. இப்படத்தை அங்கஸ் மேக்லேன் இயக்கியுள்ளார்.   

 

இந்நிலையில் 'லைட் இயர்' படத்திற்கு துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என கூறியும் 'லைட் இயர்' படத்திற்கு தடை விதித்துள்ளது.   

 

 

Next Story

ஐபிஎல் தொடர்: மும்மடங்கு தொகையை எதிர்பார்க்கும் பிசிசிஐ; முட்டி மோதவுள்ள  டிஸ்னி -சோனி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

ipl

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலம், மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில் 2023 முதல் 2027 வரைக்குமான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை, 40 முதல் 45 ஆயிரம் கோடி வரை ஏலம் போகலாம் என பிசிசிஐ எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் நெட்வொர்க் 16, 347 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

 

ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற சோனி, டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், ரிலையன்ஸ்-வயாகாம் 18, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் காத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் கடந்தமுறையை விட மும்மடங்கு தொகையை பிசிசிஐ எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய தயங்கமாட்டோம் என டிஸ்னி கூறியுள்ள நிலையில், சோனி நிறுவனமும் இந்த ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த இரு நிறுவனங்களுக்குமிடையே ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என கருதப்படுகிறது.