Skip to main content

சிவகார்த்திகேயனோடு மோதும் சுந்தர் சி?

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

sundar c

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். 

 

இப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், எதிர்வரவிற்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டாக்டர் திரைப்படம் ரம்ஜான் தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை -2' படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'அரண்மனை -3' உருவாகி வருகிறது. ஆர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சுந்தர் சி, இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அரண்மனை 3 படத்தை ரம்ஜான் தினத்தையொட்டி திரைக்குக் கொண்டுவர சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த இரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ஒரே தினத்தில் வெளியாகும் பட்சத்தில் தியேட்டர்கள் கிடைப்பதில் தொடங்கி பல நெருக்கடிகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்