Skip to main content

ஷங்கருக்காக ஒன்றுகூடிய இயக்குநர்கள்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

Directors assembled for Shankar

 

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி, அந்நியன் உட்பட அனைத்து படங்களிலுமே சமூகக் கருத்து சார்ந்த கதைகள் ஏதாவது ஒன்று அந்த படத்தில் இருக்கும். அந்த வகையில், இவர் இயக்கி கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடியும் தருவாயில் உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்தியன் படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் ஜேஞ்சர் படத்தையும் இவர் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் பான் இந்தியன் படமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

 

இவர் கடந்த 1993 ஆம் ஆண்டில் ஜென்டில்மேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரிசர்வேஷன் பற்றி இயக்கியிருந்த அந்த படத்தில் அர்ஜூன், நம்பியார், கவுண்டமணி, செந்தில், மதுபாலா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இவர், பிரபல இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவி இயக்குநராக இருந்த பின் 1993 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கினார். இதனிடையே 2023 ஆம் ஆண்டுடன் தனது 30 ஆண்டு திரைப் பயணத்தை நிறைவு செய்கிறார். இதன் காரணமாக தமிழ் திரைப்பிரபலங்கள் உட்பட அனைத்து கலைஞர்களும் இயக்குநர் ஷங்கருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இதைச்  சிறப்பிக்கும் விதமாக ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும்  திரையுலக நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டாடியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த கொண்டாட்டத்தில், பிரபல இயக்குநர்களான ஏ.ஆர். முருகதாஸ், சசி, கார்த்திக் சுப்புராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,  ‘பொன்மாலை பொழுது ... அழகான மாலை’ என்று பதிவிட்டிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.