Skip to main content

'சச்சின் கெட்டப்பில் விஜய்...'  ரகசியம் பகிரும் வசீகரா இயக்குநர் செல்வபாரதி!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Director Selvabharathi

 

வசனகர்த்தாவும் இயக்குநருமான செல்வபாரதி, நக்கீரனுடனான முந்தைய சந்திப்பில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த சந்திப்பில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய வசீகரா திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

முந்தைய பகுதி....

 

வசீகரா படம் கமிட் ஆனவுடன் முதல் சந்திப்பிலேயே நடிகர் விஜய்யிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். விஜய்யின் முந்தைய 5 படங்களில் இருந்து ஒவ்வொரு பாடலை பதிவு செய்து அதை விஜய்யிடம் கொடுத்து பார்க்க சொன்னேன். அவர் எதற்கு எனக் கேட்க, நீங்கள் பாருங்க தம்பி சொல்றேன் என்றேன். அவர் 5 பாடல்களை பார்த்து முடித்ததும் எதுக்குணே இதை பார்க்கச் சொன்னீங்க என்றார். 5 பாடல்களிலும் ஹீரோயின்தான் மாறி இருக்கு... நீங்க அப்படியே இருக்கீங்க... ஹேர் ஸ்டைல், மீசை, காஸ்டியூம் எல்லாம் அப்படியே இருக்கு என்றேன். உடனே விஜய் இப்ப என்ன சொல்ல வர்றீங்க என்றார். இந்தப் படத்துல கெட்டப்ப மாத்தணும்... பாடி லாங்குவேஜூம் மொத்தமா வேற மாதிரி இருக்கணும்... உதடே அசையாம டயலாக் பேசுறதையும் மாற்றவேண்டும் என்றேன். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். 

 

விஜய்யை வித்தியாசமாக எப்படி காட்டலாம் என்று நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன். பல நாட்கள் யோசித்தும் எனக்கு எந்த ஐடியாவும் வரவில்லை. அந்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார். அது விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. மறுநாள் விஜய்யிடம் சென்று சொன்னேன். முதலில் யோசித்த அவர், பின் சரியெனக் கூறிவிட்டார். அந்த ஹேர்ஸ்டைல் வைத்துவிட்டு மறுநாள் என்னை அழைத்தார். நேரில் பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விஜய்க்கும் பொருத்தமாக இருந்தது. அவருடைய கெட்டப்பை மாற்றியது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது. 

 

படத்தில் விஜய் சாரின் செயல்கள் எம்.ஜி.ஆர்போல இருக்கிறது என்று சொன்னார்கள். அதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. ரயிலில் தூங்கிக்கொண்டு வருவதுதான் படத்தின் அறிமுகக்காட்சியாக எழுதியிருந்தேன். நினைத்தேன் வந்தாய் படத்திலும் அதுபோன்றுதான் அறிமுகக்காட்சி இருக்கும். சென்டிமெண்டாக இதையே வைத்துக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றினாலும், வசீகரா பண்ணும்போது விஜய்க்கு பெரிய மாஸ் இருந்ததால் அதற்கேற்ற மாதிரி அறிமுகக்காட்சியை மாற்றினோம். விஜய்யை எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தலைவராக காட்டியது எல்லாம் பின்னால் எடுத்த முடிவுதான்.  

 

சுந்தர் சி இயக்கிய வின்னர் படம் விஜய் நடிக்க வேண்டியதுதான். அந்தக் கதையை சுந்தர் சி விஜய்யிடம் கூறியபோது நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். படம் வெளியான பிறகு, நான் இந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டேன் அண்ணா என்று விஜய் சொன்னார். விஜய்யை பொறுத்தவரை எந்த ஜானரில் படம் நடித்தாலும் அதற்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார். இன்றைக்கும் அவரால் ப்ரெண்ட்ஸ், காதலுக்கு மரியாதை மாதிரியான படங்களில் நடிக்க முடியும். பெரிய மாஸ் வந்துவிட்டது, நூறு கோடியைத் தாண்டிய பிசினஸ் வேல்யூ ஆகிய காரணங்களால்தான் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.