Skip to main content

“அவங்க நம்மள சுளுக்கு எடுத்து விட்றுவாங்கன்னு விஜய் சொன்னார்”- இயக்குனர் செல்வபாரதி! 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

vijay with sneha

 

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன கலைஞராக இருந்தவர் சரோஜ் கான். கடந்த சனிக்கிழமை அன்று மும்பை குருநானக் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தனர். 

இந்நிலையில் அவர் நடன வடிவமைப்பாளராக, விஜய் நடித்த ‘வசீகரா’ படத்தில் பணிபுரிந்தார். அந்த படத்தின் இயக்குனர் செல்வபாரதி, மறைந்த நடனக் கலைஞர் சரோஜ் கான் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

 

தமிழில் சரோஜ் கான் மாஸ்டருடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து?

சரோஜ் கான் மாஸ்டர் தமிழில் பணிபுரிந்த படங்களில் முக்கியமான படம், அற்புதமான படம் என்று சொன்னால் வசீகராவை சொல்லலாம். நான் வசீகரா படத்திற்கு கமிட்டானபோது வேறொரு நடன வடிவமைப்பாளரை படத்தில் பயன்படுத்தலாம் என்று பேச்சுவந்தது. நான் விஜய்யிடம், நாம் ஏன் சரோஜ் கான் மேமை பயன்படுத்தக் கூடாது என்று கேட்டேன். சரோஜ் கான் மேம், தமிழில் அப்போது படங்கள் பண்ணவில்லை என்றாலும், ஹிந்தியில் அவர் கோரியோகிராஃப் செய்த படங்கள் அனைத்தும் விரும்பி பார்த்திருக்கிறேன் என்பதால் விஜய்யிடம் அவரை சொன்னேன். விஜய் என்னிடம், அவர் பெரிய மாஸ்டர் அண்ணே நம்பளை சுளுக்கு எடுத்து விட்றுவாங்க என்று சொன்னார். நான் உடனடியாக, இல்லை தம்பி உங்களிடம் ஒரு சிறு மாறுதல் கிடைக்கும், கடைசியாக ஒரு ஐந்து ஆறு படங்களை எடுத்து பார்த்தால், உங்களுடைய டான்ஸ் பேட்டர்ன் தெரிந்துவிடும் என்று சொன்னேன். அவரும் சுப்பர் ஐடியா அண்ணே, மாஸ்டரிடம் பேசுங்கள் என்றார். 

நான் அவரை தொடர்புகொண்டபோது தமிழ் படம் என்றபோது முதலில் அவருக்கு இண்ட்ரெஸ்ட் இல்லை, விஜய்தான் ஹீரோ என்றவுடன் அவருக்கு இண்ட்ரெஸ்ட் வந்துவிட்டது. அவரும் அருமையாக டான்ஸ் ஆடுவார். சோ, எனக்கு நல்ல சேலஞ்சாக இருக்கும் தமிழில் கண்டிப்பாக வந்து பண்ணுகிறேன் என்று தெரிவித்தார். அவருடைய டேட்டை வைத்து பாடல்களை ஷூட் பண்ணினோம். ஒவ்வொரு பாடல்களுக்கும் நான்கு நாட்கள் என்று தேதிகள் வாங்கி ஷூட் செய்தோம். சொல்வாயா, ப்ரிய சகி என்கிற இரண்டு பாடல்களையும் மூன்று நாட்கள் என்ற வீதத்தில் சுலபமாக முடித்து கொடுத்துவிட்டார். அவர் செட்டிற்கு வந்துவிட்டால் அவர் தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கிவிடுவார், நமக்கு எந்த சிரமத்தையும் தர மாட்டார். தமிழில் அவரை வைத்து நான் இரண்டு பாடல்களை எடுத்தது மிகவும் பெருமை படுகிறேன். இந்தமாதிரி சூழ்நிலையில் அவரை குறித்து பேசுவது என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். பாடல்கள் முடிந்து எடிட் செய்துபார்த்தபோது விஜய் சார் மிகவும் சந்தோஷப்பட்டார். இந்த மூவ்மெண்டுகள் எல்லாம் நானா போட்டது, என்னுடைய கேரியரில் நல்ல மாறுதல்கள் உள்ள நடனம் என்று தெரிவித்தார். நடனம் அதை தவிர வேற எதுவுமே தெரியாது. 

 

விஜய்யின் நடனம் குறித்து அனைவருக்குமே தெரியும், அவர் முதலில் சரோஜ் கான் மேம் குறித்து சொன்னபோது என்ன நினைத்தார்?

அண்ணே பெரிய மாஸ்டர், அவங்க எதும் சொல்லி பண்ண முடியாட்டி ரொம்ப தப்பா போய்விடும். ‘தம்பி நீங்க போய் டான்ஸ்க்கு...’ என்று கூறினேன். அதற்கு விஜய், நம்ம இடத்தில் கெத்து காண்பித்துகொள்ளலாம். ஆனால், அவர் அங்கிருந்து வரும்போது திணரும் என்று சொன்னார். மாஸ்டரையே ஆச்சரியப்படுத்திவிட்டார் விஜய் தம்பி. ஒருமுறை அவர் ஆடுவதை மானிட்டரில் பார்த்துவிட்டார் என்றால் போதும், அதை அப்படியே எந்த பிசகும் இல்லாமல் ஆடிவிடுவார். விஜய் தம்பியும் நல்ல இன்வால்வ் ஆகிவிட்டார். படத்திலும் பாம்பே டான்ஸர்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தம்பி அவர்கள் அனைவருக்கும் ஈடுகொடுத்து ஆடினார். 

 

அந்த இரண்டு பாடல்கள் எடுக்கும்போது சரோஜ் கான் மாஸ்டர் கருத்து என்ன தெரிவித்தார்?

விஜய் சார் நல்ல டான்ஸர் என்று தெரியும். அதேபோல நல்ல மனிதராகவும் இருக்கிறார். சில ஹீரோக்கள் நடனத்தில் சில மாறுதல்கள் சொல்வார்கள். ஆனால், தம்பி ஒரு மாறுதல்கள் கூட சொல்லவில்லை. அதுவே அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. சரோஜ் கான் மாஸ்டர் சினிமாவிற்காகவே வாழ்ந்தவர். கண்டிப்பாக சினிமாவிற்கு அவருடைய இழப்பு மிகவும் பெரிதாக இருக்கும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.