Skip to main content

"விஜய் ஒரு தமிழ் ஹீரோ; அதனால் தான் கார்னர் செய்கிறார்கள்" - பேரரசு காட்டம்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

director perarasu speech about varisu theatre issue

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு சிக்கல் ஏற்படும் வகையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், அந்த அறிக்கையில், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில்  சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே விநியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

ad

 

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் இந்த அறிக்கை தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் படத்திற்கு ஆதரவாக, "தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்" எனக் கூறியுள்ளார். 

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த லிங்குசாமி மற்றும் பேரரசுவிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது லிங்குசாமி கூறுகையில், "இந்த காலம் சினிமாவின் பொற்காலம். பான் இந்தியா என்ற வார்த்தை இப்போது தான் புதிது. ஆனால், சினிமா தொடங்கிய காலகட்டத்திலிருந்தே தமிழில் இருந்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் படங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஓடிடி வந்த பிறகு எந்த நடிகர் என்று பாகுபாடு பார்க்காமல் தமிழில் எடுக்கப்பட்ட படங்களை மற்ற மாநிலத்தவர்களும் பார்க்கிறார்கள். இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த ஒரு பிரச்சனை வரவே கூடாது. இப்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையால் பிரச்சனை உருவாகினால் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தும்.

 

அதாவது 'வாரிசு'க்கு முன், வாரிசுக்கு பின் என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்படும். அந்த அளவுக்கு இது பெரிய விஷயமாக மாறும். இரண்டு மொழிகளிலும் சரியான தரமான ஆட்கள் இருக்கிறோம். அவர்கள் கலந்து பேசி சுமூகமான தீர்வு காணவேண்டும். தமிழ்நாட்டில் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடியது. நம் படங்கள் தெலுங்கில் பெரிதாக ஓடுகிறது. கலை என்பது மொழிகளைத் தாண்டி தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையை யாரோ ஒருவர் குறுகிய எண்ணத்தோடு ஏற்படுத்தியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. எண்ணம் மாற்றப்படவில்லை என்றால் நான் சொன்னது போல மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்" என்றார். 

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், "இப்படத்தில் என்ன கொடுமைனா இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல பேர் தெலுங்கை சேர்ந்தவர்கள். ஹீரோ மட்டும் தான் தமிழ் ஹீரோ. அதை வைத்து தான் கார்னர் செய்கிறார்கள். ஆனால் நாம் இங்கு மற்ற மொழி படங்களை கொண்டாடுகிறோம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் பெருந்தன்மையோடு நடந்து வருகிறோம். ஆனால், அவர்கள் தெலுங்கு படங்களுக்கு தான் பண்டிகை நாட்களில் முன்னுரிமை கொடுப்போம் எனக் கூறுவது நம்மை அவமானப்படுத்துவது போல் உள்ளது. தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் அவர் தயாரிப்பாளர். அவருக்கு பாதிப்பு என்று வரும் போது, அது தெலுங்கு தயாரிப்பாளராக இருந்தாலும் சரி. வாரிசு ஒரு தமிழ் படம். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் குரல் கொடுக்காவிட்டால் கூட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு அமைப்பு இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

 

இது வெறும் ரிலீஸ் என்று பார்க்க முடியாது. நாங்கள் எல்லா மொழி படங்களையும் ஒன்றாகவே பார்க்கிறோம். நீங்கள் ஏன் தமிழைப் பிரித்து பார்க்கிறீர்கள். இதனால் எங்கள் தமிழ் உணர்வைத் தூண்டுகிறீர்கள். நாம் தான் திராவிடம் திராவிடம் எனச் சொல்லிக்கொண்டு வருகிறோம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மக்களை சகோதரர்களாகப் பார்க்கிறோம். ஆனால், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் திராவிடம் என்ற வார்த்தை இல்லை. அதனால் அவரகள் தமிழர்களை திராவிடர்கள் எனப் பார்ப்பதில்லை. தமிழர்களை தமிழர்களாகத்தான் பார்க்கிறார்கள். இதற்கான ஒரு உதாரணம் தான் இந்த வாரிசு படப் பிரச்சனை. இந்தப் பிரச்சனையை சாதாரணமாக நாம் கடந்து போய்விட முடியாது. இது எங்களுக்கு மானப்பிரச்னை." எனக் காட்டமாகப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.