Skip to main content

 பிரபல இசையமைப்பாளரின் குரலில் வெளியான தனுஷ் படப் பாடல்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
dhanush raayan second sinlge released

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ கடந்த 9ஆம் தேதி வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். ஒரு திருவிழா பின்னணியில் ,அமைந்திருந்த இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல்  ‘வாட்டர் பாக்கெட்’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். கானா கதிர் என்பவர் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடல் சந்தீப் கிஷனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் கானா காதல் பாடலாக வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

திரைக்கு வரும் ராயன் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Release date announcement on Raayan film

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. 

மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இப்படம், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தோடு ஜூன் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ராயன் படம் எதிர்பார்த்த தேதியில் வெளிவரவில்லை. 

இந்த நிலையில், இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதில், ராயன் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Next Story

நட்புக்கு முக்கியத்துவம்; ரைட்ஸ் வாங்கி பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் பாடல்! 

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
 nanban oruvan vantha piragu press meet 

புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அனந்த் ராம், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளித்தனர். இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முஸ்தபா பாடலை பயன்படுத்தியிருக்கிறீர்களே அதற்கு முறையாக ரைட்ஸ் வாங்கியிருக்கிறீர்களா? ஏன்னா இளையராஜா இப்பெல்லாம் ரைட்ஸ் கேட்கிறாரே அதற்காகத்தான் கேட்கிறோம் என்ற கேள்வியை முன் வைத்தனர்.

அதற்கு படக்குழுவினர், “முறையாக இசையமைப்பாளரை அணுகினோம். இந்தப் படத்தில் பயன்படுத்திய பாடல் அலை ஓசை ரெக்காட்ஸ் என்கிறவர்களிடம் இருந்தது. அவர்களிடமிருந்து ரைட்ஸ் வாங்கித்தான் பயன்படுத்தியுள்ளோம்” என்றனர். மேலும், இப்படத்தின் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளனர் என்றார்கள்.