Skip to main content

"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்" -  தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
hdhdhdr

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியபோது.... 

 

“கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக இருக்கும். பட தொடங்கிய உடன், இடைவேளை வந்தது போல இருக்கும், பிறகு க்ளைமாக்ஸ் வந்துவிடும். அந்த அளவுக்கு படம் கச்சிதமாக வந்துள்ளது. இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க தான் நான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் தான் என்னிடம் நானே நடிக்கிறேன் என்று கூறினார். பிறகு யோசித்தேன், நாம் வேறு ஒரு ஹீரோவுடன் அலைவதைவிட, நம் படத்தில் நடிக்கும் சிபிராஜையே நடிக்க வைக்கலாம் என்று. சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழிலும் அவர் முன்னணி இசையமைப்பாளராக வருவார். அந்த அளவுக்கு படத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் சிவா சார். நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்கள் பணியாற்ற இருக்கிறோம். விழாவுக்கு வந்ததற்கு அவருக்கு நன்றி. ‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும் அல்ல சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதற்கெல்லாம் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்" - மனம் திறக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

"Udhayanidhi Stalin is responsible for all this" - says producer Dhananjeyan

 

நக்கீரன் ஸ்டூடியோவிற்கு, தயாரிப்பாளர் தனஞ்செயன் தமிழ் சினிமாவின் வியாபார யுக்தி; புரொமோசன் விசயங்கள் குறித்து பேசினார்; அப்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு பற்றிய நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த பதிலை காண்போம்.

 

ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய பலமே அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு நெட்வொர்க் இருக்கிறது. எல்லா பெரிய படங்களுமே அங்கிருந்து வெளியாகிறது. அதே சமயத்தில் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுகிற படங்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெளியிடும் பட்சத்தில் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது

 

திரையரங்குகள் ரெட் ஜெயண்ட்டின் வெளியீடு என்றால் லாபத்திலிருந்து 70 சதவீதம் பணத்தை கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு என்றால் 50 சதவீதம்தான் தருவார்கள். இதனாலேயே தான் அனைத்து தயாரிப்பாளர்களுமே ரெட் ஜெயண்ட் வெளியிட வேண்டும் என்று அவர்களிடமே குவிகிறார்கள்

 

ரெட் ஜெயண்ட் வெளியிடப்போகிறார்கள் என்றாலே அந்தப் படத்திற்கு வேறு எதுவும் பிரச்சனை வராது. வெளியீடும் சுமூகமாக நடந்துவிடும். அத்தோடு லாபத்தினையும் கணக்கிட்டு உங்களுக்கான பங்கினைக் கொடுத்து விடுவார்கள்

 

உதயநிதி ஸ்டாலின் அவர்களோட பங்களிப்பு என்பது இந்த 2022-ல் தமிழ் சினிமாவிற்கு மிக முக்கிய பங்களிப்பாகும். இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக சிறப்பான வருடமாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் உதயநிதி ஸ்டாலின் தான். அவர் நிறைய படங்களை வெளியிட்டு பெரிய அளவிலான வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்

 

இப்போது அமைச்சர் ஆகிவிட்டார்; அவருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன; ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Next Story

“இதுதான் அஜித்தின் பாலிசி” - சீக்ரெட் பகிரும் தயாரிப்பாளர் தனஞ்செயன்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

 “It's Ajith's policy” - Producer Dhananjeyan shares the secret

 

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. அதன் புரொமோசன் பணிகளில் எந்த விதத்திலும் அஜித் ஈடுபடவில்லையே? ஒரு திரைப்படத்தின் நடிகர் அதன் புரோமோசன் பணிகளில் ஈடுபடுவது என்பது சினிமாவை பொறுத்தவரை வசூலிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தானே? ஏன் அஜித் ஈடுபடுவதில்லை போன்ற கேள்விகளை தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம் நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

“அஜித் கடைசியா ஒரு படத்திற்கு புரொமோசன் ஒன்றைச் செய்தார் என்றால் அது பில்லா படத்திற்கு மட்டும்தான். பில்லா பட புரொமோசனுக்காக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அஜித் வந்திருந்தார். அப்போது அவரை அங்குச் சந்தித்துப் பேசினேன். அதற்குப் பிறகு கடந்த 15 வருடங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரும் அதற்குப் பிறகு எந்தப் படத்தின் புரொமோசனிலும் கலந்து கொள்வதில்லை.

 

அதே சமயத்தில், புரொமோசன் குறித்த அவரது எண்ணமும் மாறிப்போனது. அவர் சொன்னதையே இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ‘ஒரு படம்தான் அதற்கே சிறந்த புரொமோசன்’ அஜித்தைப் பொறுத்தவரை தன் திரைப்படம் வந்தாலே போதும். அதுவே அதற்கான ஓப்பனிங் வசூலைக் கொண்டு வந்துவிடும்.

 

மேலும், தன்னுடைய ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நான் எதுவுமே பண்ணத் தேவையில்லை. என் ரசிகர்களே படத்தினை ஓட வைப்பார்கள். படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்து டீசர், ட்ரைலர், பாடல் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். அதில், தான் தலையிடுவதில்லை என்பது அஜித்தின் பாலிசி.

 

அஜித் புரொமோசன் பண்ணவில்லை என்பதால் எல்லாம் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை. அஜித் சொன்னது போலவே அவர் படமே அதற்கு புரொமோசன் தான் போல.