Skip to main content

“தர்பாரால் அந்த நிறுவனத்திற்கு ரூ.70 கோடி நஷ்டம் ”- விநியோகஸ்தர்கள் புலம்பல்

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் தார்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் தர்பார் படத்தை விநியோகம் செய்த சில விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
 

darbar

 

 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட தர்பார் விநியோகஸ்தர்கள் பேசுகையில்,“தமிழ்நாட்டிலுள்ள பல விநியோகஸ்தர்கள் சேர்ந்து தர்பார் படத்தை வாங்கினோம். முதல் ஒரு வாரத்திலேயே எங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பை லைகா நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினோம். அப்போத் அவர்கள் இது சூப்பர் ஸ்டார் படம், எங்களுக்கும் வசூல் குறைந்துவிட்டது என்று தெரிகிறது. நாங்கள் எங்களுடைய சாரிடமும் பேசுகிறோம், ரஜினி சாரிடமும் பேசுகிறோம். ஒரு சூப்பர் ஸ்டாரின் படம் பத்து நாட்களில் எடுத்துவிட்டால் அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று இரண்டு வாரங்கள் அந்த கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு பொறுமையாக இருந்தோம். கடைசியில் லைகா எங்களிடம் தெரிவித்தது, எங்களுக்கு 70 கோடி நஷ்டம். ரஜினி சாருக்கும், இயக்குனருக்கும் பெரிய சம்பளமாக கொடுத்துவிட்டோம் அதனால் நீங்கள் அவர்களிடம் சென்று பாருங்கள் என்று கூறிவிட்டனர். 

அவர்கள் சொன்னதை அடுத்து ரஜினி சாரை பார்க்கப்போனோம், அப்பாயின்மெண்ட் எங்களுக்கு தருவார் என்று பார்த்தோம் ஆனால் தரவில்லை. இன்று(03-02-20) அவரை பார்ப்பதற்காக சென்றோம் அப்போது போலீஸ் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை பார்க்கக்கூடாது என்றும், அந்த சாலையிலேயே நிற்க கூடாது என்றும் சொல்லிவிட்டது போலீஸ். அதனை அடுத்து ஓரமாக போய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதாக இருந்தோம் உடனடியாக ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்று சுதாகர் என்பவரிடம் உங்கள் மனுவை கொடுங்கள் என்றனர். இங்கு வந்தால் சுதாகர் எனக்கு அந்த மனுவை வாங்க எனக்கு உரிமை இல்லை நீங்கள் லைகாவை போய் பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.

இப்படியே எங்களை அங்கையும் இங்கையும் போ என்று சொன்னால் இத்தனை கோடி போட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை வாங்கி 64 கோடிக்கு அதை விற்றுவிட்டு, 25 கோடி நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களையே நீங்கள் பார்க்கவில்லை என்றால் மற்றவர்களை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள். இப்படியே போனால் நாங்கள் என்ன ஆவது” என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.