Skip to main content

"மக்களை பழி சொல்லும் பிரபலங்கள்..."- சி.எஸ். அமுதன்  ட்வீட்

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.

  cs amudhan


தற்போது இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதனால் மக்கள் பெரும்பாலானோர் அதிர்ச்சிக்குள்ளாகி கூட்டம், கூட்டமாக கடைகளுக்கு சென்று நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ். அமுதன், “தங்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளால் அரசுகள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆனால், இன்று ஷாப்பிங் சென்றுள்ள மக்களை பழி சொல்லும் பிரபலங்களுக்கு இருக்கும் தனிச் சலுகை அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் உள்ளது. உங்கள் வட்டத்தைத் தாண்டியிருக்கும் உலகம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?" என்று தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்