Skip to main content

'முதல்வர் என்னை நடிகனாக பார்க்கவில்லை' - போஸ் வெங்கட் ஓபன் டாக்

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

'CM does not see me as an actor' - Bose Venkat Open Talk

 

கடந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் 'டாணாக்காரன்'. காவல் துறையில் பயிற்சியின் போது நடக்கும் அவலங்களை பேசும் படமாக வந்துள்ளது. விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த 'போஸ் வெங்கட்' அவர்களை நக்கீரன் ஸ்டுடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் தனது அரசியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...

 

அரசியல் ஆசை திடீர்னு வந்தது இல்லை. எங்க அப்பா திமுக-வில் இருந்தவர். எங்க வீட்டில் நிறைய கலைஞர் புகைப்படங்கள் இருக்கும். நான் லோடு மேனாக வேலை செய்த போது கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தை கடந்து தான் செல்வேன். அப்போது தளபதி அவர்களின் வீடு கலைஞர் வீட்டிற்கு எதிர்புறம் இருக்கும். தளபதி அவர்கள் தோட்டத்தில் உள்ள பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருப்பார். 'அண்ணே-னு கூப்பிடுவேன் வா தம்பி நல்லாருக்கியா பா' என்று கேட்பார். அதெல்லாம் எனக்கு கனவு மாறி தெரிகிறது.

 

எங்க அப்பா தலைவரை பார்க்க அவர் வீட்டு வாசலில் ஒரு நாள் முழுவதும் காத்திருந்தார். ஆனால் தலைவர் வெளியூர் சென்றிருந்தார். அந்த அளவிற்கு திமுக மீது ஈடுபாடுடன் இருந்தது எங்கள் குடும்பம். அந்த நேரத்தில் கண்ணம்மா திரைப்படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். எங்க அப்பா முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். தலைவர் என்னை அழைத்து தோளில் கை போட்டார். எங்க அப்பா அழ ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு கலைமாமணி விருது தலைவர் கையில் வாங்கினேன். அதை எங்க அப்பா கழுத்தில் மாட்டினேன். எங்க அப்பாவின் கனவை நான் நினைவாக்கினேன். ஆனால் என் அப்பாவிற்கு ஆசை இருக்கும்ல , நாம எந்த தலைவரை தெய்வமா பார்த்தோமோ அங்கேயே என் பையன் ஹீரோவா நடிச்சிட்டான். அந்த கட்சியிலே பயணிக்கிறான்' என்று சந்தோஷ பட்டார். என் அப்பா இறந்த பிறகு முடிவு செய்தேன். 'அவருடைய நிராசை என்னவாக  இருந்திருக்கும் இந்த ஊரில் நம்ம ஒரு அரசியல்வாதியா தோத்து போய்ட்டோம்' அதனால், சரி நம்ம ஒரு அரசியல்வாதியாகவும் வாழ்க்கையில் பயணிப்போம் என்று முடிவு செய்து அதனை தொடர்கிறேன்.

 

திமுக வரலாறு என்பது இனிமே புதுசா வரவங்க, திடீர் அரசியல்வாதிகள் அவங்க எல்லாம் படிக்கணும். ஆனால் எனக்கு எங்க அப்பா ஆறு வயதில் இருந்தே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். எங்க மீட்டிங் போனாலும் அதை சொல்லுவார். கலைஞர் எப்படி பேசினார் என்பதை பேசி காட்டுவார். அப்போதே வீட்டுக்குள் திமுக பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கும், ஆட்டோவில் நோட்டீஸ் போடுவோம். அரசியலில் பயணிப்பது என்பது திடீர்னு வந்ததில்லை. அப்போதிலிருந்து இருக்கிறது. அதனால் தான் தளபதி அவர்கள் 2016-ல் அவருடன் இருந்த போதே திடீர்னு ஒரு அறிவிப்பை அறிவித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தில் இனி நடிகர்களுக்கு வேலை இல்லை, பிரச்சாரங்களுக்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று அறிவித்தார். அடுத்த நாளில் முரசொலி பத்திரிக்கையில் போஸ் வெங்கட் பிரச்சார பயணம் என்று எழுதி இருந்தார்கள். இதனால் முதல்வர் அவர்கள் என்னை நடிகனாக பார்க்கவில்லை அரசியல்வாதியாகத்தான் பார்க்கிறார். அதனால் ஆரம்பத்தில் இருந்தே நான் திமுக-காரன் தான் என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வெளியிட்ட வெற்றிமாறன் வெளியிடும் பட அப்டேட்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

சின்னத்திரையில் அறிமுகமாகி, அதற்கு பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரகளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸ் உடன் இடம் பெறுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.