Skip to main content

"ரெண்டு காரணங்களுக்காக விஜய் சேதுபதி என்னை பிக்பாஸில் கலந்துகொள்ளச் சொன்னார்" - சேரன் பகிர்ந்த சீக்ரட்  

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் -3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக தொன்னூறு நாட்களைத் தாண்டி உள்ளே இருந்த இயக்குனர் சேரன் சென்ற நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமல்ஹாசனுடன் பழகியது குறித்தும் தான் பிக்பாஸில் கலந்துகொள்ள முக்கிய காரணமாக விஜய் சேதுபதி இருந்தது குறித்தும் சேரன் பகிர்ந்துகொண்டார்...

 

cheran vijay sethupathi



"கமல் சாரை வைத்து ஒரு படம் இயக்க எனக்கு ஆசைதான். ஆனா அது குறித்து என்னால் அங்கு பெரிதாக பேச முடியலை. ஏன்னா, உள்ள போகும்போது ஒரு 15 நிமிஷம், வெளியே வந்தப்போ ஒரு 15 நிமிஷம் அந்த மேடையில் அவரை சந்தித்ததுதான். மற்றபடி அவரை நான் சந்திக்கவில்லை. ''தேவர் மகன் 2'க்கு கதை இருக்கு சார், நீங்க சொன்னீங்கன்னா உடனே பண்ணலாம்' என்று மட்டும் அவரிடம் சொல்லியிருக்கேன். ஆனால் அதைத் தாண்டி இன்னும் எதுவும் பேசவில்லை. வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக அவருடன் பணியாற்றுவேன்.


விஜய் சேதுபதி என்னை பிக்பாஸ் வீட்டிற்குப் போகச் சொன்னது உண்மைதான். நான் அவரை வைத்து படம் இயக்க ரெடி ஆகிவிட்டேன். ஜனவரி, பிப்ரவரில ஷூட்டிங் போறதா இருந்தது. அப்போதான் இந்த வாய்ப்பு வந்தது. அது பற்றி கேள்விப்பட்டு, விஜய் சேதுபதி என்னை பிக்பாஸில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார். போனா ரெண்டு விஷயங்கள் நடக்கும்னு சொன்னார். ஒன்னு, சில வருடங்களாக நீங்கள் அதிகம் படங்கள் பண்ணாததால் இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு உங்களை குறைவாகத்தான் தெரியும், நீங்க அதில் கலந்துகொண்டால் மீண்டும் உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும் வாய்ப்பு ஏற்படும். இன்னொன்னு, உள்ள உங்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கும். அதை நீங்கள் மக்களுக்கு சொல்லலாம் என்றார். சீக்கிரமே நான் அவரை வைத்து படம் இயக்குவேன்".  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.