Skip to main content

தாமதத்தை தவிர்த்த திரையுலக பிரபலங்கள் 

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

பாராளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. 12 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

aj

 

காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். நடிகர் அஜித் காலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை குஷ்பு, நடிகர்கள் சூர்யா, சிவகுமார் குடும்பத்தினர், நடிகர் தனுஷ், ஸ்ரீகாந்த், விஜய் சேதுபதி, சத்யராஜ், டி.ஆர், உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.

 

k

 

சார்ந்த செய்திகள்