Skip to main content

"பெரிய ஹீரோக்களே இப்படித்தான்" - கால்ஷீட் பிரச்சனை குறித்து வருத்தப்பட்ட போனி கபூர்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Boney Kapoor slams big actors for completing films in 25-30 days

 

இந்தியில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'வலிமை', 'நெஞ்சுக்கு நீதி' மற்றும் 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். 

 

இப்போது மீண்டும் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து 'துணிவு' படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்க கதாநாயகியாக  மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் அவரது மகள் ஜான்வி கபூர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான  படம் ‘மிலி’. இப்படம் மலையாளப் படமான 'ஹெலன்' படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இந்தப் பட ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் போனி கபூர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் அந்த நிகழ்ச்சியில், "பெரிய ஹீரோக்கள் சிலர் 25 - 30 நாட்களுக்கு தங்களது கால்ஷீட்டை ஒதுக்கிவிட்டு முழுச் சம்பளத்தையும் கேட்கிறார்கள். தொடக்கத்திலிருந்தே அவர்கள் செயல்பாடுகள் சரியில்லை. நான் எந்த நடிகரையும் இங்குக் குறிப்பிடவில்லை. ஆனால் சிலர் இப்படித்தான் செய்கிறார்கள். 

 

அவர்கள், தங்களது வசதியைத்தான் முதலில் பார்க்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒரு நடிகர், இயக்குநருடனும் தயாரிப்பாளருடனும் ஒத்துப் போகவில்லை என்றால் அந்தப் படம் தோல்விதான் அடையும். இதனைப் பல ஹீரோக்கள் படங்களில் நான் பார்த்திருக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.  

 

போனி கபூர் எந்த நடிகரையும் குறிப்பிடவில்லை என்றாலும் இதைக் கேட்ட இணையவாசிகள் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரைத்தான் போனி கூறுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அக்ஷய் குமார்தான் குறைந்த தேதியில் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் படங்களை வெளியிடுவார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.