Skip to main content

விஜய் வீட்டில் வெடிகுண்டா..? போலீசில் சிக்கிய அஜித் ரசிகர்!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

விஜய் - அட்லி கூட்டணியில் உருவான 'பிகில்' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் காலில் பேசிய மர்ம நபர், விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று மட்டும் கூறிவிட்டு உடனே போனை துண்டித்துவிட்டார். 

 

vijay

 

 

இதையடுத்து போலீசார் உடனடியாக நீலாங்கரை, சாலிகிராமத்தில் இருக்கும் விஜய் வீடு மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது பின்னர் தெரியவந்த நிலையில் மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அந்த மர்ம நபர் போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்றும், அஜித் ரசிகராகிய அவர் போதையில் 'பிகில்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

"செஞ்சுட்டா போச்சு..." ராயப்பனை கையிலெடுத்த அட்லீ

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

atlee directing new film bigil rayappan story

 

'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, அதில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

 

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் வரும் ராயப்பன் காட்சியை பகிர்ந்து முழு திரைப்படமும் ராயப்பனை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவை பார்த்த இயக்குநர் அட்லீ "செஞ்சிட்டா போச்சு" என ரீட்வீட் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணியை முடித்த பிறகு விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். ஒரு வேலை அந்த படம் ராயப்பனை பற்றிய படமா அல்லது வேறு ஒரு புதிய படத்தில் ராயப்பன் கதையை இயக்கவுள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

Next Story

'பிகில்' திரைப்பட பாடகி சங்கீதா சஜித் காலமானார்!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Playback singer Sangeetha Sajid passes away

 

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்  பின்னணி பாடகி பாடகி சங்கீதா சஜித்.  சிறுநீரக பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் அவரது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில் இன்று காலமானர். இன்று மாலை திருவனந்தபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

1996 ஆம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ஹிட் அடித்த 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை' என்ற பாடலை சங்கீதா சஜித் பாடியுள்ளார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெறித்தனம்' பாடலிலும் இன்ட்ரோ போர்ஷனை அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.