Skip to main content

"இப்படி ஒருத்தன் வருவான் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" - இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Bharathiraja

 

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (06.12.2021) நடைபெற்றது.

 

ad

 

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "இசை வெளியீட்டு விழாக்களுக்குச் சென்று சம்பிரதாயமாக மேடைகளில் பேசுவது எனக்குப் பிடிக்காது. இன்றைக்கு வரும் படங்களின் பெயர்களே புரிவதில்லை. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற இந்தப் படத்தின் பெயரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி நல்ல கதாசிரியர், இயக்குநரும்கூட. மண் வாசனையோடு கதை சொல்கிறார். மேடையில் கௌதம் கார்த்திக் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். கார்த்திக்கை வைத்து படம் இயக்கியபோது இப்படி ஒருத்தன் வருவான் என்றெல்லாம் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. முத்துராமன் சார் படத்தில் நான் உதவி இயக்குநர். பின், அவருடைய மகன் கார்த்திக்கை வைத்து நான் படம் இயக்கினேன். தற்போது அவருடைய மகனோடு அமர்ந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்று கூட்டு குடும்பமே அழிந்துவிட்டது. உறவுகள் அனைத்தும் தள்ளி நிற்கிறது. இந்தப் படம் அற்புதமான படமாக வந்துள்ளது. இதுதான் தமிழ்ப்படம். இந்தப் படத்தோடு சம்மந்தப்பட்டுள்ள அத்தனை கலைஞர்களுமே பெருமைக்குரியவர்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அக்கா, தங்கை, அண்ணன், தம்பி பற்றிய நினைப்பு வந்துவிடும். சமீபத்தில் சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தைப் பார்த்துவிட்டு அன்றைக்கு இரவு அவனுக்கு ஃபோன் செய்தேன். முன்னரே நான் ‘பொக்கிஷம்’ பார்த்திருந்தும்கூட இப்போது பார்த்தபோது வேறு மாதிரியாக இருந்தது. அற்புதமான கலைஞன் சேரன். இந்தக் குடும்ப படத்தை தமிழ் குடும்பங்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் கடமை” எனக் கூறினார்.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

பவதாரிணி உடலைப் பார்த்து கதறி அழுத பாரதிராஜா

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
bharathiraja tribute to bhavatharini

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த இளையராஜா குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல், நேற்று இரவு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணைபுரம் கிராமத்தில், இளையராஜா பண்ணை வீட்டில் தாயார் சமாதிக்கு அருகே பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜா, பவதாரிணி உடலுக்கு மாலை அணிவித்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே எக்ஸ் தளத்தில், “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.