Skip to main content

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

bengali television pallavi dey passes away

 

மேற்கு வங்கத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமான பல்லவி டே(25) பிரபலமானார். கொல்கத்தாவில் கர்பா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் பல்லவி டே நேற்று காலை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பல்லவி டேவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். 

 

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால்  அவரது குடும்பத்தினர் பல்லவி டேயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து  அவருடன் வீட்டில் தங்கியிருந்த ஆண் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆண் நண்பர் வெளியே சென்ற பிறகு பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல்லவ டேயின் இறப்பு மேற்கு வங்க சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை கிளப்பியுள்ளது. மேலும் அவரின் இறப்புக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்