Skip to main content

“அவரது அலுவலகத்திலிருந்து அழுதபடியே வெளியே சென்றேன்”- பிரபல இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்!

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

உலகம் முழுவதும் அரசியல்வாதிகள், திரைத்துறையினர் மற்றும் பல பிரபலங்கள் மீது பெண்கள் மீடூ புகாரளித்து வருகின்றனர். இந்தியாவில் பாஜகவை சேர்ந்த எம்பி ஒருவர் மீடூ புகாரினால் தன்னுடைய பதவியையே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதேபோல ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் மீடூ புகார்கள் குவிகின்றன.
 

me too

 

 

இந்நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது பெங்கால் நடிகை ரூபஞ்சனா மித்ரா மீடூ புகார் அளித்திருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதுகுறித்து புகாரளித்த நடிகை கூறுகையில், “இயக்குனர் அரிந்தம் செல் தனது அலுவலகத்துக்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு அவர் மட்டுமே இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் திடீரென்று எழுந்து வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டு போனார்.

அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார். அவரது ஆசைக்கு உடன்பட மறுத்தேன். சிறிது நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்தார். அதன்பிறகு நான் அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே வெளியே சென்றேன்” என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனாவால் மரணமடைந்த பழம்பெரும் நடிகர்! 

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

soumitra chatterjee

 

 

இந்தியாவிலுள்ள பல மொழி சினிமா துறைகளில் மிகவும் முக்கியமான சினிமா துறை பெங்கால் சினிமா துறை. இத்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற நடிகரான சௌமித்ர சாட்டர்ஜி காலமான செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

பதேர் பாஞ்சாலி படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித் ரே-வின் பல படங்களில் நடித்துள்ள சௌமித்ர சாட்டர்ஜி, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், தாதா சாகிப் பால்கே உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

 

கடந்த 60 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சௌமித்ரா சாட்டர்ஜி நடித்துள்ளார். கரோனா வைரஸால் கடந்த மாதம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரின் உடலில், வைரஸால் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் உயிர் பிரிந்தது என்று நேற்று செய்திகள் வெளியானது.

 

85 வயதாகும் சௌமித்ர சாட்டர்ஜியின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Next Story

விரக்தியில் பிரபல நடிகை தற்கொலை!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை சுபர்ணா ஜாஷ். கல்லூரியில் படிப்பதற்காக தன்னுடைய சொந்த ஊரான பர்த்வானிலிருந்து கொல்கத்தா வந்து தன் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதுதான் கனவு. அதனால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார்.

subarna

 

 

இந்த முயற்சியினால் சில சீரியல்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். அதை பயன்படுத்தி சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். ஆனால், நாயகியாக நடிப்பதுதான் அவருடைய கனவு என்பதால் மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டே இருந்துள்ளார்.
 

day night


இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு தனது அறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார். மகளை தொங்கிய நிலையில் பார்த்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இதனால்தான் இந்த தவறான் முடிவை சுபர்ணா ஜாஷ் எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.