Skip to main content

'அந்த படத்திற்கு விருது கொடுக்கணும்' - பாக்யராஜ் புகழாரம் 

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
bhagyaraj

 

 

 

லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் ஜி.வி.கே இணைந்து தயாரித்துள்ள படம் 'திசை'. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய  பி.வரதராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க, நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் வரதராஜன் பேசியபோது... "இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் மக்கள் இன்று, சற்றே விலை அதிகம் என்றாலும் கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்க  ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி ஆர்கானிக் உணவுப்பொருட்கள் என்கிற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகின்றது. அதுபற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். 

 

 

 

உதாரணத்திற்கு சொல்லப்போனால் நாட்டு வைத்தியம் என்கிற பெயரில் ஆர்கானிக் முறையில் கேன்சரை குணமாக்குகிறேன், சர்க்கரை நோயை இல்லாமல் செய்கிறேன் என சிலர் பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இப்போது வருகிற ஆர்கானிக் உணவுப்பொருட்கள் சரியானது தானா என்பதையம் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டாம் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறோம். எனது குருநாதர்கள் காமெடி,ஆக்சன் ரூட்டில் பயணித்தாலும் அதிலேயே தொடர்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. இந்தப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் இதுபோன்ற படங்களுக்குத்தான் விருதுகள் கொடுக்கப்படனும்னு எங்களை பாராட்டியது மறக்க முடியாதது" என்றார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டார். இப்போது இயக்குனர் கரு.பழனியப்பன் இன்னொரு பாடலை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து தற்போது  போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அப்பா ரொம்ப ஃபீல் பண்ணாரு... சாரி!" - கரோனாவில் பாக்யராஜ்! சாந்தனு விளக்கம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

dgxdbdb

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று (07.05.02021) பதிவிட்டார். அதில், தன் பெற்றோர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து சாந்தனு தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"Dear wellwishers

அப்பா compulsory ஓய்வுல இருக்கணும்னு Dr’s அட்வைஸ், அதான் phone’la யார்கிட்டயும் பேச முடியல.
நான் பேசலேன்னு கால் பண்ணவங்க feel பண்ணுவாங்கன்னு அப்பா ரொம்ப feel பண்ணாரு. Sorry, புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியும். ரெண்டு பேரும் நலமா இருக்காங்க. We will return ur calls soon" என பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

கே. பாக்யராஜ் தம்பதியருக்கு கரோனா தொற்று உறுதி! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

gdsgdsgsdgdsgs

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் பெற்றோர் கே. பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.