Skip to main content

இளவரசன் திரும்புகிறான்... 'ஆயிரத்தில் ஒருவன் - 2' அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

selvaragahavan dhanush announces AO2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரவீந்திரன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், பார்த்திபன், கார்த்திக், ரீமாசன், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம், 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

 

சோழ வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும், இன்றளவும் சினிமா ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. இப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று (டிசம்பர் 31, 2020) 'ரீ-ரிலீஸ்' செய்யப்பட்டது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர்.

 

இதையடுத்து, இயக்குனர் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பதிவில், "இதுவரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

செல்வராகவனின் ட்வீட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "மிகப் பெரிய பணி. முன் தயாரிப்புக்கு மட்டும் ஒருவருடம் தேவைப்படும். ஆனால், இது செல்வராகவனின் கனவுப் படம். இப்படத்திற்காக சிறிதுகாலம் நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் காத்திருப்பை மதிப்புமிக்கதாக மாற்ற எங்கள் முழு உழைப்பையும் தருவோம். 2024-ல் இளவரசன் திரும்புகிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்