Skip to main content

”என்னுடைய 25 வருட உழைப்பிற்குப் பிறகு இது நடக்கிறது” - அருண் விஜய் நெகிழ்ச்சி

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

 Arun Vijay

 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகர் அருண் விஜய் பேசுகையில், “பட ஷூட்டிங், டப்பிங்கை விட ப்ரொமோஷன்தான் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அதை ரொம்ப சந்தோசமாக பண்ணோம். தமிழ்நாடு முழுக்க போகணும் மாப்ள என்று ஹரி சார் முதலிலேயே சொல்லிவிட்டார். எல்லா பகுதிக்கும் சென்று ப்ரொமோஷன் செய்த பிறகு மாப்ள ஒரு மூணு ஏரியா விடுபட்டிருக்கு என்று சொன்னார். அதன் பிறகு, அங்கும் சென்றோம். நேற்றைய முன்தினம் மலேசியா சென்றிருந்தேன். அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

ஜூலை 1ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய கதைக்களத்துடன் உங்களைச் சந்திக்க இருக்கிறோம். படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு கணத்தோடும் மகிழ்ச்சியோடும் வெளியே வருவீர்கள். இது முழுக்க முழுக்க திரையரங்கிற்கான படம். அதனால் அதற்கு ஏற்ற மாதிரி ஹரி சாரும் ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு காட்சிக்காகவும் சிரத்தை எடுத்து உழைத்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை பெரிய பலமாக உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கும் மிகப்பெரிய படம். என்னுடைய 25 வருட உழைப்பிற்குப் பிறகு இது நடக்கிறது” என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நிறைய மெசேஜ்கள் வருகிறது” - தெளிவுபடுத்திய அருண் விஜய்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
arun vijay about Mission Chapter 1 ott update

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் ‘மிஷன் சாப்டர் 1’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்து ரசிகர்கள் தன்னிடம் கேட்டு வருவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிஷன் சாப்டர் 1 பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நிறைய மெசேஜ்கள் வருகிறது. லைகா நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன்.” என குறிப்பிட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சி அதன் உரிமையை வாங்கியுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே ரசிகர்கள் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.