Skip to main content

கங்கனா ரணாவத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

Armed security for Kangana Ranaut in chandramukhi 2 shoot

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். பாலிவுட் திரையுலகம் ஒரு முனையில் இருந்தால் கங்கனா ரணாவத் அதற்கு எதிராக மறுமுனையில் இருப்பார். பாலிவுட்டில் திரையுலகினரின் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை கூறி வரும் கங்கனா, மோடி பிரதமராகப் பதவி ஏற்றதிலிருந்து தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு, தொடர்ந்து மத்திய அரசுக்கும், மோடிக்கும் ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். 

 

தொடர்ந்து  கங்கனா ரணாவத் கூறும் கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி வருவதால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்  கங்கனா ரணாவத்  வெளியில் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.  கங்கனா ரணாவத் தற்போது பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். அப்படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பாகத் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் இருந்து வருகிறார்களாம். இதன் காரணமாகப் படப்பிடிப்பு தளத்தில் சற்று பரபரப்பு நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

சர்ச்சையான பேச்சு - ஆதாரத்தை வெளியிட்ட கங்கனா

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
kangana ranaut explained subhas chandra bose issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நிலையில் இந்தியாவின் முதல் பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது, “எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.  

1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றிருந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் என கங்கனா கூறியிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி கங்கனாவை ஆதரித்து பா.ஜ.கவினரும் எதிராக காங்கிரஸை சார்ந்தவர்களும் மாறி மாறி கருத்து பகிர்ந்து வந்தனர். 

இந்த நிலையில் இந்த சர்சைக்கு ஆதாரமாக ஒரு பிரபல ஊடகத்தின் செய்தி குறிப்பை பகிர்ந்துள்ளார் கங்கனா. அந்த செய்தி குறிப்பில், “நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர், அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் (சுதந்திர இந்தியா) என்ற அரசை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது சுபாஷ் சந்திர போஸ் தன்னைப் பிரதமர், மாநிலத் தலைவர் மற்றும் போர் அமைச்சராக அறிவித்தார்.

மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதன். இந்திய தேசிய ராணுவத்திற்காக போராடும் பெண் வீரர்களின் படையான ராணி ஜான்சி படைப்பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கினார். ராணி ஜான்சி படைப்பிரிவு ஆசியாவிலேயே முதல் பெண்கள் மட்டும் போர் படைப்பிரிவு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.