Skip to main content

'அவர் நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜுனுக்கு சப்போர்ட் செய்த தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
arjun

 

 

 

சமீபத்தில் #meetoo சர்ச்சையில் சிக்கிய நடிகர் அர்ஜூன் தமிழில் தற்போது நடித்து வரும் படம் "இருவர் ஒப்பந்தம்". சமீர் தயாரித்து இயக்கி வரும் இப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் 'கான்ட்ராக்ட்' எனும் பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சோனி செரிஸ்டா 'மீடூ' வில் சிக்கிய நடிகர் அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து பேசும்போது... "அர்ஜுன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே அவர் ஒரு ஜென்டில்மேன். ஒரு தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார். நான் நடித்து வரும் இப்படத்தில் அவர் அவ்வளவு நாகரீகமாகவும், ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். எந்த அமைப்பாக இருந்தாலும் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து. அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது. என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது குடும்பத்தில் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” - அர்ஜுன் 

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
arjun about modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார் நடிகர் அர்ஜுன். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கோவிலுக்கு அவரை அழைத்திருக்கிறேன். விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். நான் பிஜேபியில் இணையவில்லை. முதலில் அரசியல் நமக்கு தெரியாது. முதல் தடவை அவரை சந்திக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு ஆளுமை. எனது குடும்பத்திலும் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்றார். சென்னை கெருகம்பாக்கதில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘விடாமுயற்சி’ - ஏ.கே. க்ளிக்ஸ்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023

 

 

 

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது.

அங்கு நடந்த படப்பிடிப்பின்போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரவ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது உறுதியாகிவிட்டது. அஜித்துடன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அர்ஜுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார் என்று யூகியுங்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவிற்கு கீழ் அனைவரும் அஜித் என கமெண்ட் செய்திருந்தனர். 

இந்த நிலையில் படக்குழுவை அஜித் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அர்ஜுன் நேற்று பகிர்ந்திருந்த புகைப்படம், இயக்குநர் மகிழ் திருமேனியின் புகைப்படம், ரெஜினா கெஸாண்ட்ராவின் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட் செய்யப்பட்டார். முதற்கட்ட படப்பிடிப்பும் அவர்தான் பணியாற்றினார். ஆனால் அண்மையில் திடீரென்று ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியானது. அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.