Skip to main content

"யாருமே என் மீது நம்பிக்கை வைக்காதபோது" -இயக்குனருக்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்...

Published on 24/11/2020 | Edited on 24/11/2020
aa

 

 

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில், கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றியடைந்த படம் 'கைதி'. அப்படத்தில் ‘அன்பு’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் அர்ஜுன் தாஸ். இதைத் தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். 

 

இதற்கிடையே அட்லீ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கும் 'அந்தகாரம்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ். சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகிவுள்ளது.

 

இதனை தொடர்ந்து அர்ஜுன் தாஸ், படக்குழுவுக்கும் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், "அந்தகாரம் தற்போது,  நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிவுள்ளது. அட்லீ, பிரியா அட்லீ, சுதன் ஆகியோருக்கு நன்றி. இப்படம், எப்போதும் விக்னராஜனின் அந்தகாரமாகத்தான் இருக்கும். யாருமே என்னை நம்பாதபோது, என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் விக்னராஜனுக்கு நன்றி.  உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கைதி 2-வில் விவரிக்கப்படும்" - லோகேஷ் கனகராஜ்

Published on 09/06/2022 | Edited on 10/06/2022

 

"Described in kaithi 2" - Lokesh Kanagaraj

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

 

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் " கைதி படத்தில் உயிரிழந்த அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் உயிருடன் இருப்பது எப்படி, நம்ம முடியவில்லை" என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த லோகேஷ், " கைதி படத்தில் அன்புவின் தாடை பகுதி மட்டும் தான் நெப்போலியனால் உடைக்கப்படும். அதனால்தான் தையல் அச்சுடன் விக்ரம் படத்தில் தோன்றுவார். இது பற்றி கைதி 2 படத்தில் மேலும் விவரிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 

Next Story

கவனம் ஈர்க்கும் 'புத்தம் புது காலை விடியாதா' ட்ரைலர் !

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

Putham Pudhu Kaalai Vidiyaadhaa movie trailer goes viral

 

தமிழ் சினிமாவில் அந்தாலஜி திரைப்படங்களுக்கான வரவேற்பு அதிகமாகி வருகிறது. சமீபத்தில் வெளியான 'பாவக்கதைகள்', 'நவரசா' உள்ளிட்ட அந்தாலஜி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது ஐந்து  கதைகள் கொண்ட 'புத்தம் புது காலை  விடியாதா' என்ற அந்தாலஜி திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந் மற்றும் டீஜே அருணாசலம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று(4.12.2022) 'புத்தம் புது காலை விடியாதா' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கரோனா ஊரடங்கில் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் சவால்களையும் மையமாக ஐந்து கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது யூடியூப் தளத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்படம் வரும் 14 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.