Skip to main content

விஜயகாந்த், அஜித், விஜய்.. மூன்று பேருக்கும் முருகதாஸ் தந்த முக்கிய பரிசுகள்!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

ஏ.ஆர்.முருகதாஸ்... தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குனராக அறிமுகமாகி, அடுத்தடுத்து எடுத்து வைத்த பெரிய எட்டுகள் வெற்றி பெற்று பாலிவுட் வரை பிரபலமாகி இருப்பவர். பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் இந்திய படங்களை தயாரிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இவரை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இப்படி பெரிய வெற்றிகளுக்கு சொந்தக்காரரான முருகதாஸ், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரும் இல்லை. கஜினி, கத்தி, சர்கார், பின் மிக தாமதமாக ரமணா என கதை குறித்த புகார்கள் எழுந்தன. ஆனால், அவையெல்லாம் மறையுமளவுக்கு இவரது வெற்றி பெரிதாகியிருக்கிறது.  
 

arm with ajith

 

 

எஸ்.ஜே.சூர்யா மூலமாக அஜித்திற்கு அறிமுகமாகி, கதை சொல்லி, 'தீனா' படத்தை இயக்கிய போது முருகதாஸ் இருபதுகளின் தொடக்கத்தில்  இருந்தார். முதல் படமே பெரிய கமர்ஷியல் வெற்றி. எதிரில் விஜய், சூர்யா நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்காக வெளிவந்த 'ப்ரண்ட்ஸ்' படம் குடும்பங்களை கவர்ந்து பெரு வெற்றி பெற, 'தீனா'வோ அஜித்திற்கு இளைஞர்களை ரசிகர்களாக, வெறியர்களாக மெல்ல உருவாக்கிக்கொண்டிருந்தது. 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்று எஸ்.பி.பி. குரலில் ஓப்பனிங் சாங், 'தல' என்று அஜித்திற்கு பட்டம், 'கை இருக்கும் கால் இருக்கும்...' என்று பன்ச் வசனம், 'தினக்கு தினக்கு தின தீனா' என்று அஜித் நடந்துவரும்போது இசை... இப்படி அஜித்திற்கு முதல் மாஸ் ஆக்ஷன் படமாக 'தீனா' அமைந்தது. இன்று வரை அஜித்தை ரசிகர்கள் 'தல' என்றே விரும்பி அழைக்கின்றனர். அந்தப் பெயரை தோனிக்காக கிரிக்கெட் வணிகர்களும் ரசிகர்களும் எடுத்துக்கொண்டனர். அஜித், தன்னை நம்பி வாய்ப்பளித்ததற்கு பதிலாக முருகதாஸ் அளித்தது ஒரு மிக முக்கிய பரிசு, 'தீனா'. அதற்குப் பிறகு இருவரும் இணைவதாக அறிவித்து வெளிவந்த 'மிரட்டல்' படத்தின் போஸ்டர்கள் சோசியல் மீடியா இல்லாத போஸ்டர், பேப்பர் காலத்திலேயே வைரல் ஆகின. ஆனால், அந்தக் கூட்டணி தொடராமல் படம் கைவிடப்பட்டது (பின்பு கஜினி என்று வந்தது) ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான்.

ரசிகர்களின் வரவேற்பை பெற்று 'தீனா' வெற்றி பெற்றாலும் விமர்சகர்களை பொறுத்தவரையில் அது மிக சாதாரணமான அல்லது வன்முறையை தூண்டும், இளைஞர்களை கெடுக்கும் படமாகவே இருந்தது. அந்தப் பெயரை முற்றிலும் நீக்கி அதற்கு நேர்மாறாக வெளிவந்து மெகா ஹிட் ஆனது 'ரமணா'. அரசியல் திட்டங்களில் இருந்த விஜயகாந்த்திற்கு 'ரமணா' கொடுத்த மைலேஜ் மிகப் பெரியது. கிராமங்களில் ஏற்கனவே வேரூன்றியிருந்த விஜயகாந்த் மீது அப்போதைய நகரத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஈர்ப்பும் மரியாதையும் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது 'ரமணா' பாத்திரம். அஜித்தின் 'வில்லன்', விஜய்யின் 'பகவதி', சிம்புவின் முதல் படமான 'காதல் அழிவதில்லை' என பெரும் போட்டியின் இடையே வெளியாகி முதலிடத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது 'ரமணா'. 'மன்னிப்பு... தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை', 'யார்யா அவரு, எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு' என இன்றும் மீம்ஸ்களில் வலம் வரும் பல நல்ல வசனங்களை கொண்டிருந்த அந்தப் படம் முருகதாஸுக்கும் மிக முக்கிய படமாக அமைந்தது. தன்னைப் போன்ற இளம் இயக்குனரை நம்பி கால்ஷீட் கொடுத்த கேப்டனுக்கு முருகதாஸ் அளித்த மிகப்பெரிய பரிசாக அமைந்தது.                                         

நடிகர் விஜய்க்கு அவரது கேரியரில் பல வெற்றிப் படங்கள் அமைந்திருந்தாலும் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற மிக முக்கியமான படங்களாக மூன்றை சொல்லலாம். ஒன்று, விஜய்க்கு உண்மையான வெற்றிப் படமாக முதன் முதலில் அமைந்த 'பூவே உனக்காக'. இரண்டு, ஆக்ஷன் கதையில் அவரது முதல் வெற்றிப் படமான 'திருமலை'. அதுவரை விஜய்யின் காதல் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. 'திருமலை' வெற்றிக்குப் பிறகு பல ஆண்டுகளாக லோக்கல் கில்லியாக இருந்த விஜய்யை க்ளாஸ் மாஸ் நாயகனாக வெற்றிகரமாக உருவாக்கியது ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி'தான். இன்று வரை விஜய்யின் ரசிகர்களை தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த விஜய் படங்களின் லிஸ்ட்டில் 'துப்பாக்கி'க்கு முக்கிய இடமுண்டு. 'துப்பாக்கி' பெற்ற பெருவெற்றி விஜய் - முருகதாஸ் என்ற கூட்டணியை இன்று வரை பலமாக வைத்துள்ளது. அந்த வகையில் 'துப்பாக்கி', விஜய்க்கு முருகதாஸ் தந்த நல்லதொரு பரிசு என்றே சொல்லலாம். 
 

arm with vijay

 

 


இது மட்டுமல்ல நடிகர் சூர்யா பெற்ற முதல் ஆல்-க்ளாஸ் வெற்றி என்பது 'கஜினி' படத்தில் நிகழ்ந்ததே. இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களுக்கு வெற்றிப் படங்களை பரிசளித்த முருகதாஸ், இப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை 'தர்பார்' படத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார். அரசியல் அறிவிப்பு செய்திருக்கும் ரஜினிக்கு அது முருகதாஸின் பரிசாக இருக்குமா என்பது விரைவில் தெரியும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.