Skip to main content

விஜயகாந்த், அஜித், விஜய்.. மூன்று பேருக்கும் முருகதாஸ் தந்த முக்கிய பரிசுகள்!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

ஏ.ஆர்.முருகதாஸ்... தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குனராக அறிமுகமாகி, அடுத்தடுத்து எடுத்து வைத்த பெரிய எட்டுகள் வெற்றி பெற்று பாலிவுட் வரை பிரபலமாகி இருப்பவர். பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் இந்திய படங்களை தயாரிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இவரை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இப்படி பெரிய வெற்றிகளுக்கு சொந்தக்காரரான முருகதாஸ், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரும் இல்லை. கஜினி, கத்தி, சர்கார், பின் மிக தாமதமாக ரமணா என கதை குறித்த புகார்கள் எழுந்தன. ஆனால், அவையெல்லாம் மறையுமளவுக்கு இவரது வெற்றி பெரிதாகியிருக்கிறது.  
 

arm with ajith

 

 

எஸ்.ஜே.சூர்யா மூலமாக அஜித்திற்கு அறிமுகமாகி, கதை சொல்லி, 'தீனா' படத்தை இயக்கிய போது முருகதாஸ் இருபதுகளின் தொடக்கத்தில்  இருந்தார். முதல் படமே பெரிய கமர்ஷியல் வெற்றி. எதிரில் விஜய், சூர்யா நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்காக வெளிவந்த 'ப்ரண்ட்ஸ்' படம் குடும்பங்களை கவர்ந்து பெரு வெற்றி பெற, 'தீனா'வோ அஜித்திற்கு இளைஞர்களை ரசிகர்களாக, வெறியர்களாக மெல்ல உருவாக்கிக்கொண்டிருந்தது. 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்று எஸ்.பி.பி. குரலில் ஓப்பனிங் சாங், 'தல' என்று அஜித்திற்கு பட்டம், 'கை இருக்கும் கால் இருக்கும்...' என்று பன்ச் வசனம், 'தினக்கு தினக்கு தின தீனா' என்று அஜித் நடந்துவரும்போது இசை... இப்படி அஜித்திற்கு முதல் மாஸ் ஆக்ஷன் படமாக 'தீனா' அமைந்தது. இன்று வரை அஜித்தை ரசிகர்கள் 'தல' என்றே விரும்பி அழைக்கின்றனர். அந்தப் பெயரை தோனிக்காக கிரிக்கெட் வணிகர்களும் ரசிகர்களும் எடுத்துக்கொண்டனர். அஜித், தன்னை நம்பி வாய்ப்பளித்ததற்கு பதிலாக முருகதாஸ் அளித்தது ஒரு மிக முக்கிய பரிசு, 'தீனா'. அதற்குப் பிறகு இருவரும் இணைவதாக அறிவித்து வெளிவந்த 'மிரட்டல்' படத்தின் போஸ்டர்கள் சோசியல் மீடியா இல்லாத போஸ்டர், பேப்பர் காலத்திலேயே வைரல் ஆகின. ஆனால், அந்தக் கூட்டணி தொடராமல் படம் கைவிடப்பட்டது (பின்பு கஜினி என்று வந்தது) ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான்.

ரசிகர்களின் வரவேற்பை பெற்று 'தீனா' வெற்றி பெற்றாலும் விமர்சகர்களை பொறுத்தவரையில் அது மிக சாதாரணமான அல்லது வன்முறையை தூண்டும், இளைஞர்களை கெடுக்கும் படமாகவே இருந்தது. அந்தப் பெயரை முற்றிலும் நீக்கி அதற்கு நேர்மாறாக வெளிவந்து மெகா ஹிட் ஆனது 'ரமணா'. அரசியல் திட்டங்களில் இருந்த விஜயகாந்த்திற்கு 'ரமணா' கொடுத்த மைலேஜ் மிகப் பெரியது. கிராமங்களில் ஏற்கனவே வேரூன்றியிருந்த விஜயகாந்த் மீது அப்போதைய நகரத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஈர்ப்பும் மரியாதையும் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது 'ரமணா' பாத்திரம். அஜித்தின் 'வில்லன்', விஜய்யின் 'பகவதி', சிம்புவின் முதல் படமான 'காதல் அழிவதில்லை' என பெரும் போட்டியின் இடையே வெளியாகி முதலிடத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது 'ரமணா'. 'மன்னிப்பு... தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை', 'யார்யா அவரு, எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு' என இன்றும் மீம்ஸ்களில் வலம் வரும் பல நல்ல வசனங்களை கொண்டிருந்த அந்தப் படம் முருகதாஸுக்கும் மிக முக்கிய படமாக அமைந்தது. தன்னைப் போன்ற இளம் இயக்குனரை நம்பி கால்ஷீட் கொடுத்த கேப்டனுக்கு முருகதாஸ் அளித்த மிகப்பெரிய பரிசாக அமைந்தது.                                         

நடிகர் விஜய்க்கு அவரது கேரியரில் பல வெற்றிப் படங்கள் அமைந்திருந்தாலும் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற மிக முக்கியமான படங்களாக மூன்றை சொல்லலாம். ஒன்று, விஜய்க்கு உண்மையான வெற்றிப் படமாக முதன் முதலில் அமைந்த 'பூவே உனக்காக'. இரண்டு, ஆக்ஷன் கதையில் அவரது முதல் வெற்றிப் படமான 'திருமலை'. அதுவரை விஜய்யின் காதல் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. 'திருமலை' வெற்றிக்குப் பிறகு பல ஆண்டுகளாக லோக்கல் கில்லியாக இருந்த விஜய்யை க்ளாஸ் மாஸ் நாயகனாக வெற்றிகரமாக உருவாக்கியது ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி'தான். இன்று வரை விஜய்யின் ரசிகர்களை தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த விஜய் படங்களின் லிஸ்ட்டில் 'துப்பாக்கி'க்கு முக்கிய இடமுண்டு. 'துப்பாக்கி' பெற்ற பெருவெற்றி விஜய் - முருகதாஸ் என்ற கூட்டணியை இன்று வரை பலமாக வைத்துள்ளது. அந்த வகையில் 'துப்பாக்கி', விஜய்க்கு முருகதாஸ் தந்த நல்லதொரு பரிசு என்றே சொல்லலாம். 
 

arm with vijay

 

 


இது மட்டுமல்ல நடிகர் சூர்யா பெற்ற முதல் ஆல்-க்ளாஸ் வெற்றி என்பது 'கஜினி' படத்தில் நிகழ்ந்ததே. இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களுக்கு வெற்றிப் படங்களை பரிசளித்த முருகதாஸ், இப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை 'தர்பார்' படத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார். அரசியல் அறிவிப்பு செய்திருக்கும் ரஜினிக்கு அது முருகதாஸின் பரிசாக இருக்குமா என்பது விரைவில் தெரியும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.