Skip to main content

எங்கேஜ்மெண்ட் கேன்சல்; மாடலிங் டூ டாப் ஹீரோயின்; ரவுண்டு கட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

 

ராஷ்மிகா மந்தனா வெளியிடுகிற ஃபோட்டோ ஷூட் படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் வருபவை. இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ரசிகர்களால் பின்பற்றப்படுகிறவர். அவர் செய்கிற சுட்டித்தனத்தாலும், அவர் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன்களாலும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே இருப்பவர். 

 

ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இன்னொரு புறம் கலாய்க்கப்படாமலும் இல்லை. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வெவ்வேறு காமெடி காட்சிகளோடு ஒத்துப்போகும் ராஷ்மிகாவின் படங்களையும் சேர்த்து  பரப்பி விடுகின்றனர். இது ராஷ்மிகாவின் கண்களில் பட, அதை அப்படியே தன் ட்விட்டரில் பகிர்ந்த ராஷ்மிகா "வடிவேலு சார் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்...” என்று சொல்லி ரசிக்கவும் வைத்தவர்.

 

எல்லாவிதமான கதைகளோடும், கதாபாத்திரங்களோடும் தன்னை சோதித்துப் பார்க்க விரும்புவதாகக் கூறும் ராஷ்மிகா, ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் வைக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தையும், “இது உனக்கு சூட் ஆகும் ராஷ்... புகுந்து விளையாடு” என்று சொல்லும் தனது உள்ளுணர்வையுமே நம்புவதாக சொல்லி இருக்கிறார்.

 

கர்நாடக மாநிலம் விராஜ்பேட் பகுதியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்மிகா மந்தனா. கல்லூரிக் காலம்வரை ராஷ்மிகாவுக்கு சினிமா ஆசையே இருந்ததில்லையாம். அவர் அழகைப் பார்த்து சிலர் மாடலிங் செய்யச் சொல்ல அவரும் 'போய்த்தான் பார்ப்போமே' என்ற ஆசையில் செய்து பார்த்திருக்கிறார்.

 

இதில் ஓரளவுக்கு அடையாளம் கிடைக்க, 2012-ல் 'இந்தியாவின் புத்துணர்ச்சியான முகம்' என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போது இதழியல், இலக்கியம் என்று படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்த ராஷ்மிகாவிடம் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் குழுவினர் அப்ரோச் செய்ய, ரக்சித் ஷெட்டிக்கு ஜோடிபோட்டு அங்குதான் தொடங்கியிருக்கிறது ராஷ்மிகாவின் சினிமா ஆட்டம்.

 

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

அறிமுக ஹீரோவோடு ஜோடி போட்டாலும், ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த படமே கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரோடு கமிட்டானார். அதுவும் ஹிட். அப்படியே தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டு, மீண்டும் கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து, ‘யஜமானா’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியையும் ருசி பார்த்தார் ராஷ்மி. இந்த வெற்றி, மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்த வைத்திருக்கிறது அவரை.

 

தெலுங்கு சினிமாவில் ‘வெங்கி குடுமுலா’ என்ற இயக்குநரின் ‘சலோ’ படத்தில், நாக சௌரியாவுக்கு ஜோடி ஆனார். அந்தப் படமும், அதற்கு அடுத்து வந்த படமான ‘கீதா கோவிந்தமும்’ யாருடா இந்தப் பொண்ணு என்று திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவும், ‘இன்கெம் காவாலே’ பாட்டில் சேலை மடிப்பை அப்பாவியாக சரிசெய்து, தமிழ் ரசிகர்களையும் அட்ராக்ட் செய்தார். அதுவே கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் மூலம் ராஷ்மிகாவுக்கு தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறது.

 

26 வயதாகும் ராஷ்மிகா மந்தனா சினிமாவுக்குள் வந்து ஆறு ஆண்டுகள்தான் ஆகின்றன. குறைந்த படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால்... ராஷ்மிகா குவித்து வைத்திருக்கும் சொத்துகளைப் பார்த்தால் எவ்வளவு தான்மா சம்பளம் வாங்குன என கேட்க வைக்கிறார். கர்நாடக மாநிலத்தில் காபி தோட்டத்திற்கு பேர் பெற்ற குடகுமலையில் 24 ஏக்கரில் காபி எஸ்டேட், விராஜ்பேட்டையில் ஷெரினிட்டி என்ற பெயரில் 2 மாடிகள் கொண்ட பெரிய பங்களா, 2 பெட்ரோல் பங்க், 5 ஸ்டார் அந்தஸ்தில் பிரமாண்ட கல்யாண மண்டபம், இன்டர்நேஷனல் ஸ்கூல் என வகை தொகையில்லாமல் சொத்துகளை வைத்துள்ளாராம்  ராஷ்மிகா.

 

எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளின் மதிப்பு இருக்கும். "இந்த வயசுல இப்படி வளர்ச்சியா” என வாய் பிளந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ராஷ்மிகாவின் வீடு, பெட்ரோல் பங்குகள், கல்யாண மண்டபம், ஸ்கூல் ஆகியவற்றிலெல்லாம் அதிரடி ரெய்டு நடத்தி, கணக்கில் காட்டாத பணத்தைக் கைப்பற்றினார்கள் என்பது தனிக்கதை.

 

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

 

கன்னட சினிமாவில் பெரிய பணக்கார ஹீரோவாக இருக்கும் ரக்‌ஷித் ஷெட்டி, முன்னணி தயாரிப்பாளரும் கூட. ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. சினிமாவிற்குள் வந்து ஒரே வருடத்தில், அதாவது 2017 ஜூலை 3-ஆம் தேதி ரக்‌ஷித் ஷெட்டிக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஒரே வருடத்தில் அதாவது 2018 செப்டம்பர் மாதமே நிச்சயதார்த்தம் ரத்தானது. திருமணம் நடைபெறவில்லை.

 

அதன்பின், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்தேவரகொண்டாவுடன் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, ‘டியர் காம்ரேட்’ படத்திலும் ஜோடி போட்டார். விஜய் தேவரகொண்டா உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தமிழில் கார்த்தி உடன் சுல்தான், அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா என்று ரவுண்டு கட்டி அடித்த ராஷ்மிகா தமிழின் முன்னணி ஹீரோவான விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

 

இன்னும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கிலும் ஹிந்தியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிற ராஷ்மிகா பெரிய ரவுண்டுக்கு தயாராகி வருகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மாணவர்களுக்கு ராஷ்மிகா வாழ்த்து

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
rashmika abut school students

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதியும், பிளஸ் 1 - 14ம் தேதி,  பிளஸ் 2 - 6ம் தேதி வெளியிடப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்வு நடந்து கொண்டிருக்கும் அனைவருக்கும்.. ஆல் தி பெஸ்ட். அனைவரும் நன்றாக பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.