Skip to main content

டிசம்பர் 15-ல் அண்ணாத்த படப்பிடிப்பு துவக்கம்?

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

rajini

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படத்தின் பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன.

 

நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்னால் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால், அண்ணாத்த படத்தினை முடித்துவிட்டு அவர் அரசியலில் முழுக்கவனம் செலுத்த இருக்கிறார். இதனைக்கருத்தில் கொண்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பானது டிசம்பர் 15-ம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஜினி அண்ணாத்த படத்திற்கான தன்னுடைய பணிகளை 60 சதவிகிதம் நிறைவு செய்துள்ளார். எனவே பிற நடிகர், நடிகைகள் சம்பத்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கிவிட்டு, ரஜினி தொடர்பான காட்சிகளை ஜனவரியில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

 

shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

இந்த நிலையில் இப்படத்தில் ஷோபனா நடிக்க, அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் தளபதி படத்திற்குப் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.