Skip to main content

"அஜித் சார் கைகொடுத்து ரொம்ப நன்றின்னு சொன்னார்..." - அண்ணாத்த பாடலாசிரியர் நெகிழ்ச்சி!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

 Arun Bharathi


சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள 'வா சாமி...' என்ற ஹிட் பாடலை எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதியிடம் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அண்ணாத்த படத்திற்குப் பாடல் எழுதியது, இயக்குநர் சிவாவுடனான அறிமுகம், நடிகர் அஜித்துடனான சந்திப்பு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...

 

வா சாமி பாடலுக்கான சூழலைச் சிவா சார் சொல்லும்போதே வீர விநாயகா பாடல் எப்போதெல்லாம் விநாயகர் சதுர்த்தி வருகிறதோ அப்போதெல்லாம் ஒலிக்கிறது. அதேபோல சிறு தெய்வங்களுக்கான பாடலாக இப்பாடல் இருக்க வேண்டும் என்றார். அவர் சொல்லும்போதே பாடலின் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே நேரத்தில் ரஜினி சார் ரசிகர்களுக்கும் பாடல் பிடிக்க வேண்டும். இவை இரண்டையும் கவனத்தில் வைத்து எழுதிய பாடல்தான் வா சாமி. இந்தப் பாடல் இமான் சாரின் மெட்டுக்கு எழுதிய பாடல். நான் எழுதிக்கொடுத்த முதல் பல்லவியே சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாடலை எழுதும்போதே இப்பாடல் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட உள்ளதாகச் சிவா சார் கூறினார். ஊரில் குலசாமி வழிபாடுகளில் இந்தப் பாடல் கட்டாயமாக ஒலிக்கப்படும் என்றும் கூறினார். அவர் சொல்லும்போதே இது வதம் தொடர்பான பாடல் என்று புரிந்தது. அதனால்தான், உக்கிரங்கள் ஒன்றுபட... உச்சி வானம் ரெண்டுபட... உருமா கட்டி ஊர காக்க வாரான் வாரான்... மதுரை வீரன் மதம் கொண்டு வாரான்... என ஆக்ரோஷத்தின் வெளிப்பாடாக அப்பாடலை எழுதினேன். 

 

சிவா சாருடைய படங்கள் பக்கா கமர்ஷியலாக இருக்கும். குடும்பத்தோடு திரையரங்கில் சென்று பார்க்கலாம் என்ற உணர்வைக் கொடுக்கும். இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்குமென்பதால் நான் எழுதிய புதிய பானை பழைய சோறு என்ற கவிதைப் புத்தகத்தை அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தைக் கொடுக்கும்போது இவர் நமக்குப் பாட்டு தருவார் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. நான் கொடுத்த நேரத்தில் அவர் விஸ்வாசம் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். 

 

என்னுடைய கவிதை முழுக்க முழுக்க தேனி வட்டார வழக்கில் இருந்ததாலும் என்னுடைய கவிதைகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாலும் விஸ்வாசம் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இப்பதான் சார் உங்களைச் சந்தித்தேன். அதுக்குள்ள எனக்கு பாட்டு கொடுக்குறீங்க. நிஜமாவா என்றேன். இல்லை சார். உங்ககிட்ட திறமை இருக்கு. உங்களால முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு என்றார். விஸ்வாசம் படத்தில் தல்லே தில்லாலே பாடல் எழுதி முடித்தபிறகு என்னை வெகுவாக பாராட்டினார். வைரமுத்து சார் கிட்ட பாட்டு வாங்குன மாதிரி இருக்கு. எதை எடுக்குறது. எதை நீக்குறதுனு தெரியல. அந்த அளவிற்கு நல்லா எழுதிருக்கீங்க என்றார். இதுவரை எனக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டுகளில் இதுவும் ஒன்று. 

 

விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில்தான் அஜித் சாரை சந்தித்தேன். இவர்தான் சார் நம்ம படத்துல டங்கா டங்கா பாட்டு எழுதுன கவிஞர் என்று அஜித் சாரிடம் சிவா சார் அறிமுகப்படுத்தினார். அஜித் சார் கைகொடுத்துவிட்டு ரொம்ப நன்றி சார். எனக்கு நல்ல பாட்டு குடுத்துருக்கீங்க என்றார். இவ்வளவு பெரிய படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான்தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்றேன். படப்பிடிப்பு முடியவும் நிச்சயமாக நாம் சந்திப்போம் என்றார். சாப்டீங்களா என்று அக்கறையோடு கேட்டார். நான் என்னுடைய புத்தகத்தை அவருக்குப் பரிசாக குடுத்தேன். அந்த சந்திப்பு அனுபவமே சிறப்பாக இருந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.