Skip to main content

''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
gdsh

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி, உறைவிடமின்றி தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கஷ்ட்டப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இவர்களில் சில தரப்பினர் வீடு திரும்ப அரசங்கமும், பிரபலங்களும் உதவி வருகின்ற நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து நடிகை ஆண்ட்ரியா சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...


''நேற்று காலை கண்விழித்த போது என் ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களை காணமுடிந்தது. வெளியே சென்று பார்த்தபோது என் வீட்டு பால்கனியின் அருகே உள்ள மாமரத்தில் மிகப்பெரிய தேன் கூட்டை கண்டேன். நான் தேனீக்களுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் நான் அவற்றினால் கடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவற்றை எந்த துன்புறுத்தலுமின்றி வேறு இடத்துக்கு நகர்த்த சிலரை அழைத்தேன். இறுதியாக என் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அவற்றின் மீது பூச்சிக் கொல்லி அடித்து அவற்றை கொல்வது, இன்னொன்று அவற்றோடு வாழப் பழகிக் கொள்வது.

எனக்கு பறக்கும் பூச்சிகள் என்றால் பயம்தான், எனினும் நான் பாதுகாப்பாக இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. இந்த உயிரினங்கள் மீது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் நம் சுற்றுசூழல் அமைப்பில் அவற்றின் பங்கு இன்றியமையாதது. தேனீக்கள் அழிந்தால், அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான். இது தேனீக்களை பற்றிய கதைதான் என்றாலும் இது நம் நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையை பற்றியதும்தான்.

 

 


என் பால்கனியில் இருக்கும் தேனீக்களுக்கு நான் பொறுப்பென்றால், நம் நாடு முழுவதும் நிர்கதியாகியுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு. ராணி தேனீ மிகவும் புத்திசாலி. தனது தொழிலாளி தேனீக்கள் இல்லாமல் தான் இல்லை என்பது அதற்கு தெரியும், தேன் கூடு சிறப்பாக இயங்கவேண்டுமென்றால் தொழிலாளி தேனீக்கள் அதற்கு வேண்டும். தேனீக்களிடமிருந்து மனிதர்களாகிய நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது'' என கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறனுடன் இணைந்த 'அறம்' பட இயக்குநர் - அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

aram movie director gopi nainar next movie announced

 

தமிழில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக வெற்றிமாறன் தயாரித்த 'அனல் மேலே பனித்துளி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று (21.12.2022) ஆண்ட்ரியா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

இதனைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இப்படத்தை இயக்க வெற்றிமாறன் தயாரிக்கிறார். 'மனுசி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகும் 'மனுசி' படத்தை வெற்றிமாறன் தயாரிக்க ஆண்ட்ரியா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

 

 

 

Next Story

தள்ளிப்போகும் பிசாசு 2 - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

pisasu 2 get postponed - latest information released

 

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'நெஞ்சை கேளு' அண்மையில் வெளியானது.

 

இதனிடையே 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் வாங்க மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து விரைவில் படக்குழு விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.