Skip to main content

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் ஆந்திர அரசு..

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

spb

 

"பாடு நிலா பாலு"  என  அன்போடு அழைக்கப்படும் அளவிற்கு, தனது தேன்மதுரக் குரலால், ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி, கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

 

ஆந்திர மாநிலம் நெல்லூரைப் பூர்விகமாகக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஏற்கனவே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், எஸ்.பி.பாலசுப்ரமணியதிற்கு 'பாரத ரத்னா' வழங்கவேண்டுமென பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தற்போது, ஆந்திர அரசு, நெல்லூரில் உள்ள இசை மற்றும்  நாட்டியப் பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியதின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக, ஆந்திராவின் தொழில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான கௌதம் ரெட்டி, தனது ட்விட்டர் பதிவில், "மாபெரும் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் பெயரை, 'டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளி' என மாற்ற அரசு முடிவு செய்துள்ளது" எனக் கூறியுள்ள்ளார். 

 

இதற்கு நன்றி தெரிவித்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியதின் மகன் சரண், இந்த கௌரவத்திற்காக, ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன் மோகனுக்கும் நன்றியுடன் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Jaganmohan Reddy meeting with Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று (09.02.2024) சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடிக்கு திருப்பதி ஏழுமலையான் முழு உருவச்சிலையை நினைவு பரிசாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார். இந்த சந்திப்பின் போது போலவரம் திட்டப்பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும், மின்சாரத்துறை நிலுவைத் தொகையை தரவும் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் மோடியுடன் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆந்திர அரசியலில் கால் பதித்த அம்பத்தி ராயுடு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Ambati Rayudu who set foot in Andhra politics

நடந்து முடிந்த 16 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். அதன் பின்னர் சென்னை அணியின் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். அதே சமயம் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு சந்தித்து வாழ்த்து பெற்றார்.