Skip to main content

'அந்தாதூன்' ரீமேக் படத்திற்கு பூஜை!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

dgdbgds

 

2018-ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் 'அந்தாதூன்', சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இந்திப்படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றது.

 

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில் 'அந்தாதூன்' படத்தின் மலையாள ரீமேக் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரையை கிழித்த ரசிகர்கள்; நடிகையை பாதுகாப்பாக வெளியேற்றிய தனுஷ் 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Theater Screen Tearing Dhanush Fans

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தின் திரை ரசிகர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருந்த போது தாய் கிழவி பாடலுக்கு ரசிகர்கள் ஸ்க்ரீன் முன்பு எழுந்து ஆடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திரையரங்கு ஸ்க்ரீன் கிழந்ததாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் திருச்சிற்றம்பலம் படத்தின் அதிகாலை காட்சியை நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் படக்குழுவினருடன் பார்த்துள்ளனர். திரையரங்கில் தனுஷ்யை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் விசிலடித்து கரகோஷத்தை எழுப்பினர். மேலும், படம் முடிந்து தனுஷ் உட்பட படக்குழுவினர் வெளியேறினர். அப்போது, தனுஷ் தனது காரை நோக்கி செல்லும் வழியில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, தனுஷுடன் அங்கு நடிகை ராஷிகண்ணாவும் உடனிருந்தார். வெளியே ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்ததால், பதட்டமடைந்த தனுஷ் அங்கிருந்த  ராஷிகண்ணாவையும் அவருடன் சேர்த்து பத்திரமாக வெளியேற்றினார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

Next Story

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த உதயநிதி

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

udhayanidhi stalin said thiruchitrambalam movie release july1

 

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இப்படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்ட  நிலையில் தற்போது இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.