Skip to main content

‘கர்ணன்’ படத்தை பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குநர்!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

aanand l rai

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படம் விமர்சன ரீதியாவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ‘கர்ணன்’ படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "‘கர்ணன்’ திரைப்படம் பார்த்த அனுபவத்தைக் கூற வேண்டுமென்றால் அற்புதமாகவும் சிறப்பாகவும் இருந்தது எனலாம். மாரி செல்வராஜ் சிறந்த கதை சொல்லி. அவருடைய சிந்தனையை திரையில் கொண்டுவந்த விதம் அற்புதமாக இருந்தது. தனுஷ், நீங்கள் நடிகர் என நினைத்திருந்தேன். தான் ஒரு மேஜிக் கலைஞன் என்பதை என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஏற்கனவே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘ராஞ்சனா’ திரைப்படத்தில் நடித்த தனுஷ், தற்போது அவரது இயக்கத்தில் உருவாகிவரும் ‘அத்ரங்கி ரே’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் பாலிவுட் - சர்ப்ரைஸாக அடுத்த பட அறிவிப்பை அறிவித்த தனுஷ்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

dhanush new bollywood movie update

 

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை சன் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்க ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கு தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. 

 

தனுஷ், 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஞ்சனா' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள தனுஷ், "சில படங்கள் உங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிடும். உண்மையில், அப்படி எங்கள் வாழ்க்கையை மாற்றி படம் ராஞ்சனா" என குறிப்பிட்டுள்ளார். 

 

ராஞ்சனா படத்தை தொடர்ந்து இரண்டாவது இந்தி படமாக பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். பின்பு மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'அந்த்ராங்கி ரே' படத்தில் நடித்தார். இப்படம் 'கலாட்டா கல்யாணம்' என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இதையடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ராஞ்சனா படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. 

 

 

 

Next Story

இந்தியில் தொடர்ந்து நடிக்கும் தனுஷ்... மூன்றாவது முறையாக இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி?

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

anand l rai  and dhanush joining third time new film

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. 

 

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
 

'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் அடுத்ததாக இரண்டு இந்தி படங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் வெளியான ராஞ்சனா மற்றும் 'அத்ராங்கி ரே'( கலாட்டா கல்யாணம்) ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரபல இந்தி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.