Skip to main content

மாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்! வைரலாகும் ட்வீட்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

grger

 

மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் மோகன் லால் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு புத்தகம் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அமிதாப் பச்சன், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

bfb


"மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால். எனக்கு மிகுந்த அபிமானம் உள்ள ஒரு நபர். அவர் எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பியுள்ளார். அவரது மகள் விஸ்மயா எழுதி, வரைந்த ‘க்ரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகம். கவிதைகள் மற்றும் ஓவியங்களின் மிகவும் ஆக்கபூர்வமான உணர்திறன் கொண்ட, பயணம் நிறைந்த புத்தகம். திறமை என்பது ரத்தத்தில் கலந்துள்ளது! அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

 

vdgvdgv

 

இதற்குப் பதில் அளித்து மோகன் லாலும் ட்வீட் செய்துள்ளார். அதில்..." காலை வணக்கம் சார். நீங்கள் பகிர்ந்த ட்வீட்டுக்கு மிகவும் நன்றி. உங்களிடமிருந்து வந்திருப்பது உயர்ந்த இடத்தில் இருந்து வந்த பாராட்டு. எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பலத்த பாதுகாப்பு - பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

india vs pakistan world cup match rajini amitab attending

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை மறுநாளான 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ பிரம்மாண்டமாக இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இந்தப் போட்டியைக் காண பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நேரில் சென்று கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். அதன்படி மூவரும் கலந்துகொள்கின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலிருந்து 11,000 பாதுகாவலர்கள் ஈடுபடவுள்ளனர். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரபல பாடகர் அர்ஜித் சிங் பாடவுள்ளார். இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

 

Next Story

அமிதாப்பச்சனுக்கு எதிராக பரபரப்பு புகார்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

CAIT filed a complaint against Amitabh Bachchan

 

திரைப்படங்களை தாண்டி பல விளம்பர படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சன், ஆன்லைன் வணிகத் தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவன விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆண்டுதோறும் அந்த நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகையான ‘பிக் பில்லியன் டே’ இந்தாண்டு வருகிற 8 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை விளம்பரப்படுத்தும் பொருட்டு அதன் விளம்பரப் படத்தில் நடித்த அமிதாப் பச்சன் நடித்த விளம்பரம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் "சில்லறை விற்பனைக் கடைகளில் இது போன்ற மொபைல்களுக்கான ஆஃபர்கள் கிடைக்காது" என்ற வசனத்தை பேசியிருந்தார். 

 

இந்த வசனம் நுகர்வோரை தவறாக வழி நடத்துவதாக சிஏஐடி பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும் நாட்டின் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் அந்த விளம்பரத்தை திரும்பப் பெறவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் மீது அபராதம் விதிக்கப்படவும் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.