Skip to main content

''எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' - அமிதாப் பச்சன் ட்வீட்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

dsvd


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆயுஷ்மான் குரானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘குலாபோ சிதாபோ’. மேலும் இந்தப் படத்தில் பிஜேந்திர காலா, விஜய் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 


சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீஸாகிறது. வருகிற ஜூன் 12ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் வரும் 'மாதரி கா பந்தர்' எனத் தொடங்கும் பாடலை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, ''நகர்கிறேன், வளர்கிறேன், எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவ் காலமானார்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

bollywood actor raju srivastav passed away

 

இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் புகழ் பெற்ற நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவ். இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.  

 

இந்நிலையில் உடல் நலம் மிகவும் மோசமடைந்து அதன் காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ராஜு ஸ்ரீவஸ்தவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  


 
ராஜு ஸ்ரீவஸ்தவ், 'மைனே பியார் கியா', 'பாசிகர்' உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகர் கைது; அதிர்ச்சியில் திரையுலகம்! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Siddhanth Kapoor arrested drugs case Bengaluru

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவரின் சகோதரரும், நடிகருமான சித்தாந்த் கபூர் நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார்  நடைபெற்ற இரவுப் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி நடிகர் சித்தாந்த் கபூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருடன் சேர்த்து அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

சமீபத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு நிரபராதி என்று கூறி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பாலிவுட்டை கடந்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் பிரபலம்  சிக்கியுள்ளது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.