Skip to main content

''இறுதி முடிவாக என்ன வரும் என்று யோசிக்கிறேன்'' - அமிதாப்பச்சன் கேள்வி!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
fafa

 

 

மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், சின்னத்திரை, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தொடர்பான படப்பிடிப்பு மற்றும் அதையொட்டிய பணிகளில் 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் பணியாற்றக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அரசாங்கம் அப்படி ஒரு விதியை கொண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த விதியை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... 

 

"பல கவலைகள் எனது மனதைப் பாதித்துள்ளன. 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லக்கூடாது என அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு, என் வேலைக்கு, என் 78வது வயதில் மூடுவிழா என்றே நினைக்கிறேன். நாங்கள் இருக்கும் திரைப்பட அமைப்பு இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்பிறகு இந்த வயது வரம்பு விதியை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்று நினைக்கிறேன். எனவே இப்போதைக்கு 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலை செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் நீதிமன்றம், வழக்குகள் எல்லாம் நீண்ட காலம் செல்லும். எனவே இறுதி முடிவாக என்ன வரும் என்று யோசிக்கிறேன். ஒருவேளை நீதிமன்றத்தில் வயது வரம்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் எனக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று உத்தேசித்து சொல்ல முடியுமா? " என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Next Story

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பலத்த பாதுகாப்பு - பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

india vs pakistan world cup match rajini amitab attending

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை மறுநாளான 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ பிரம்மாண்டமாக இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இந்தப் போட்டியைக் காண பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நேரில் சென்று கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். அதன்படி மூவரும் கலந்துகொள்கின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலிருந்து 11,000 பாதுகாவலர்கள் ஈடுபடவுள்ளனர். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரபல பாடகர் அர்ஜித் சிங் பாடவுள்ளார். இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.