Skip to main content

"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

ameesha patel


பிரபல இந்தி திரைப்பட நடிகை அமீஷா படேல். இவர் இந்தியில், 'ரேஸ் 2', 'ஷார்ட்கட் ரோமியோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் 'புதிய கீதை' படத்தில் நடித்துள்ளார். தற்போது பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு, லோக் ஜன சக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திரா என்பவருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

இந்தநிலையில் அவர் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், தான் பீகாரில் பாதுகாப்பற்ற முறையில் உணர்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அமீஷா படேல். இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த அமீஷா படேல், பீகாரில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தான் ஆதரவாகப் பிரச்சாரம் செய்த லோக் ஜனசக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திராவையே குற்றஞ்சாட்டியுள்ள அவர், பிரகாஷ் சந்திரா தன்னை மிரட்டியதாகவும், தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் கூறியள்ளார்.

 

மேலும், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மாலையில் விமானத்தில் செல்ல இருந்ததாகவும், ஆனால் அதில் செல்ல அனுமதிக்காமல் ஒரு கிராமத்தில் வைத்து, நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இங்கேயே விட்டுச் சென்றுவிடுவேன் என பிரகாஷ் சந்திரா மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், பேசியுள்ள அமீஷா, அங்கிருந்து தப்பிக்க மும்பைக்கு வரும்வரை, அவர்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளவேண்டியிருந்தது எனவும், மும்பைக்கு வந்த பிறகும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தன்னை பற்றி உயர்வாகப் பேசவேண்டும் என மிரட்டுவதகவும் கூறியுள்ளார்.

             
லோக் ஜனசக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திரா, இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன் மீது தவறான குற்றசாட்டுகளை சுமத்த, ஜன் அதிகர் கட்சித் தலைவர் பப்பு யாதவிடம் பணம் வங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனக்கு ஆதரவாகப் பேசி வீடியோ வெளியிட, அமீஷா படேல் பத்து லட்சம் கேட்டதாகவும் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் பட நடிகைக்கு கடைசி வாய்ப்பளித்த நீதிமன்றம்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

actress ameesha patel check bounce case update

 

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல், தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்தவர். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து 'டெசி மேஜிக்' (Desi Magic) என்ற இந்தி படத்தை தயாரிக்க முடிவு செய்து, அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார். 

 

அப்போது 2018ல் இப்படம் திரைக்கு வந்துவிடும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்றும் அமீஷா கூறியுள்ளார். பின்பு 2013ல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டபடி படம் முடிக்கப்படவுமில்லை திரைக்கும் கொண்டு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். வாங்கிய கடன் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ.2.5 கோடி மற்றும் ரூ.50 லட்சம் என இரண்டு செக் அமீஷா பட்டேல் கொடுத்துள்ளார். அமீஷா கொடுத்த செக்கை அஜய் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய், நீதிமன்றத்தை நாடி, அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அமீஷா நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாததால் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையில் அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ராஞ்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17 ஆம் தேதி அமீஷா பட்டேல் நீதிமன்றத்தில் ஆராஜனார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி, ஜூன் 21 ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி தெரிவித்தார். ஆனால் இன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. மொஹாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவசரமாக பங்கேற்றதால் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது வழக்கறிஞர் இன்னும் சிறிது கால அவகாசம் கேட்டு நீதிபதியிடம் கேட்டார். இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி நடிகைக்கு கடைசி வாய்ப்பாக ஆஜராகுமாறு தெரிவித்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். 

 

 

Next Story

மோசடி வழக்கு; விஜய் பட நடிகைக்கு மீண்டும் பிடி வாரண்ட்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Warrant issued against Ameesha Patel in cheque bounce case

 

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து 'டெசி மேஜிக்' (Desi Magic) என்ற இந்தி படத்தை தயாரிக்க முடிவு செய்து, அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார். 

 

அப்போது 2018ல் இப்படம் திரைக்கு வந்துவிடும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்றும் அமீஷா கூறியுள்ளார். பின்பு 2013ல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டபடி படம் முடிக்கப்படவுமில்லை திரைக்கும் கொண்டு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். வாங்கிய கடன் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ.2.5 கோடி மற்றும் ரூ.50 லட்சம் என இரண்டு செக் அமீஷா பட்டேல் கொடுத்துள்ளார். அமீஷா கொடுத்த செக்கை அஜய் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய், நீதிமன்றத்தை நாடி, அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அமீஷா நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாததால் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த ராஞ்சி நீதிமன்றம், அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது. மேலும் வருகிற 15 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.  

 

இதே போல் யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் 32.25 லட்சம் கடன் வாங்கி, அவர்களுக்கு திருப்பி கொடுத்த செக்கில் பணம் இல்லாததால் மோசடியில் ஈடுபட்டதாக கூறி அந்நிறுவனம் மத்தியப் பிரதேச போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. போபால் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.