Skip to main content

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அட்லீ

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

allu arjun next film direction atlee

 

'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இது பாலிவுட் திரையுலகில் அட்லீயின் அறிமுகப் படமாகும். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இயக்குநர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பேன் இந்தியா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.  இயக்குநர் அட்லீ கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்து போக, உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும்  சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அல்லு அர்ஜுனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
allu arjun Wax Statue at dubai

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் உலக அளவில் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி விரைவில் திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலை புஷ்பா படத்தில் அவர் செய்யும் போஸ் ஒன்றை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள இந்த சிலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் ஹீரோவாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், மெழுகு சிலை அருகில் அதே போஸுடன் அதே ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.