Skip to main content

ஹேக் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு - எலான் மஸ்க்கிடம் புகார்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Aishwarya Rajesh's Twitter account hacked

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி அளவில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடைசியாக 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே நாளில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான 'ரன் பேபி ரன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

 

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள  'ஃபர்ஹானா', 'சொப்பன சுந்தரி', 'துருவ நட்சத்திரம்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது பிஆர்ஓ யுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது கணக்கில் பதிவிடப்படுபவை குறித்து யாரும் சந்தேகிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். 

 

இதையடுத்து கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்கிடம் ஐஸ்வர்யா ராஜேஷின் சார்பாக அவரது பிஆர்ஓ புகார் அளித்துள்ளார். அந்த பதிவில், "ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சிக்கலைத் தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

கடந்த ஜனவரி மாதம் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த கிஷோர் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இன்னும் அது சரி செய்யப்படவில்லை. இம்மாத தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். பின்பு மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விரைவில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கும் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்புக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Elon Musk shocked Trump at US Presidential Election

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில், வேட்பாளராக நிற்க போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

Elon Musk shocked Trump at US Presidential Election

அந்த வகையில் கடந்த 3ஆம் தேதியும், 5ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதே போல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன், அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும், தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்படுவதால், பல முன்னணி தொழிலதிபர்களை டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியது.  

இந்த நிலையில், டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், வேட்பாளர்களில் எவருக்கும் நான் நிதியுதவி அளிக்கப்போவதில்லை’ எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அதிரடி அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் எனக் கூறப்படுகிறது. 

Next Story

“‘எக்ஸ் மெயில்’ விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” - எலான் மஸ்க்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
X Mail will be launched soon Elon Musk

எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஜிமெயில் சேவைகள் நிறுத்தப்படும் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ் மெயில் சேவை தொடங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.