Skip to main content

பெண்களின் வலிமையை உணர்த்தும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

aishwarya lekshmi ammu movie release oct 19th ott prime

 

ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதளவு பாராட்டப்பட்டதோடு, ரசிகர்கள் மத்தியில் கவனத்தையும் ஈர்த்தது. 

 

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி,  சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியுள்ள அம்மு படத்தில் நடித்துள்ளார். கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண், அவளின் வலியை கடந்து மற்றவர்களுக்கு அதை திருப்பி கொடுக்கும் வகையில் படத்தின் மையக்கரு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.  கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படம் வரும் 19 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறியதாவது, “அம்மு பல காரணங்களுக்காக எங்களுக்கு விஷேஷமானது. இது பெண்களின் வலிமை மற்றும் நெகிழ்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு முக்கியமான மற்றும் பொருத்தமான கதையாகும், புத்தம் புதுக் காலை மற்றும் மகானுக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜுடன் எங்களின் அடுத்த கூட்டணியையும் இது உறுதிப்படுத்துகிறது. எங்கள் முன்னணி நடிகர்களான ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோரின் அற்புதமான நடிப்பை அம்மு கொண்டுள்ளது. பிரைம் வீடியோவில், இந்தக் கதையை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரவிய வதந்தி - முற்று புள்ளி வைத்த கமல் படக்குழு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
aishwarya lekshmi joined kamal thug life team

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தில் நடிக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ad

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக முன்பே படக்குழு அறிவித்திருந்தனர். கடந்த கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  

இப்படத்தில் விருமாண்டி புகழ் அபிராமியும், நாசர் உள்ளிட்ட பிரபலங்கலை தொடர்ந்து கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. இதையடுத்து ஐஷ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதற்கு முற்றும் புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஐஷ்வர்யா லக்‌ஷ்மி இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

"என்னம்மா நீ இப்படி இருக்கியேம்மா..." - நடிகையை கலாய்த்த ஜெயம் ரவி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

jayam ravi speech at ponniyin selvan 2 press meet

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை (28.04.2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதனை முன்னிட்டு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் மணிரத்னம், பார்த்திபன், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது ஜெயம் ரவி படக்குழுவினரை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

 

அவர் ஐஸ்வர்யா லட்சுமி பற்றி கூறுகையில், "அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கும் அவங்களுக்கும் சில காட்சிகள் இருக்கிறது. ஒரு காட்சியில் கயிறு கூட இல்லாமல் யானை மேல் ஏறினாங்க. அது சாதாரணமான விஷயம் இல்லை. ஜாக்கி ஜான் போன்று அவுங்க செயல்பட்டாங்க. அவங்களுடைய மற்றொரு வெர்ஷனை நான் அப்போது தான் பார்த்தேன். நான் யானை மேல் முன்னாடி உட்கார்ந்திருந்தேன். அவுங்க பின்னாடி உட்காந்திருந்தாங்க. அப்போது ஒரு சப்போர்ட்டுக்கு என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கு ஒரு ராஜாவை அப்படி யாரும் தொட்டுவிட முடியாது என்று சொன்னாங்க. அப்போது கூட அந்த கதாபாத்திரமாகவே இருந்தாங்க. என்னம்மா நீ இப்படி இருக்கியேம்மா...என சொல்லிவிட்டு பெருமைப்பட்டேன். இதுபோன்று அவங்களுக்கு 100 நல்ல படங்கள் வர வேண்டும். அவங்களோடு ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார். 

 

த்ரிஷா பற்றி கூறுகையில், "இப்போது டிவி (TV) த்ரிஷா வைரஸ் என புதுசாக வைரஸ் வந்திருப்பதாக ட்விட்டரில் சொன்னாங்க. அது வந்தால் போகமாட்டேங்குதாம். மனசுக்குள்ள வந்துவிடுகிறதாம். காலையில் இருந்து இரவு வரை அந்த வைரஸ் இருக்கிறதாம். அந்த வைரஸ் போக வேண்டாம். நான் மனசுக்குள்ளயே வச்சுக்கிறேன் என பல பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க" என்றார். மேலும் த்ரிஷாவை பார்த்து, "இதுபோன்று ஒரு வைரஸை பரப்பாதீங்க. உங்க வைப்-அ பரப்புங்க. த்ரிஷாவை நாங்க எப்போதுமே ரசிப்போம். இப்போ தைரியமாக சொல்வேன் என்னுடைய தங்கச்சி என்று. ஏனென்றால் படத்தில் தங்கச்சியாக நடித்திருக்காங்க. சின்ன வயசிலிருந்தே ஒன்றாக பார்த்து வருகிறோம். பழகி வருகிறோம். அந்த அன்புக்கு நன்றி" என்றார்.