Skip to main content

"10 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் எதிர்பார்த்த நாள் இறுதியாக வந்துவிட்டது" - அனிருத்

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

"After 10 years, the day we've been waiting for has finally here " - Anirudh

 

தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு குறுகிய காலத்திலே இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். படங்கள் மட்டுமல்லாது இசை நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார் அனிருத். அந்த வகையில் பிரான்ஸ், லண்டன் உள்ளிட சில நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள அனிருத் இதுவரை தமிழ்நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தியதில்லை.


இந்நிலையில் அனிருத் தனது அடுத்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் வெளியிட்டுள்ள பதிவில், "10 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் எதிர்பார்த்த நாள் இறுதியாக வந்துவிட்டது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கும். நம்ம சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த ஆண்டு வருகிற செம்ப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வருகிறோம். நம் தமிழ்நாட்டில் எங்களுடைய முதல் இசை நிகழ்ச்சி இது. விரைவில்" எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக அனிருத் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிருத் பாடிய ‘ஆவோ கில்லெல்’ பாடல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Aao Killelle album song released

அனிருத் குரலில் பிரவின் மணி இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘ஆவோ கில்லெல்'. பி ரெடி மியூசிக் இப்பாடலை வெளியிடுகிறது.  ஆவோ கில்லெல் என்பது ஒரு இசை கலைடோஸ்கோப் என்றும் இது தொற்று தாளங்கள், ஆத்மார்த்தமான குரல்கள் மற்றும் விளையாட்டுத்தனமான கூறுகளை இணைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பீட்டர்ஸின் ரித்மிக் ராப், வைஷாலி ஸ்ரீ பிரதாப்பின் டல்செட் டோன்கள், நவின் பியின் பாடல் வரிகள் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் இருக்கிறது. 

Next Story

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி பட நடிகை

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
sivakarthikeyan ar murugadoss movie update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அதை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட்  ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் வில்லனாகத் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் நடிக்கிறார். இவரைத் தவிர்த்து இசையமைப்பாளராக அனிருத் சிவகார்த்திகேயன் படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.