Skip to main content

"கங்கனாவுக்கு பத்மஸ்ரீ.. எங்களுக்கு ஒன்றுமே இல்லை" - 'வாரிசு' பட பிரபலம் வேதனை

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

actress jayasudha speech about indian government goes virai on internet

 

 


1970களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயசுதா. மேலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வந்த இவர், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனிடையே அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜெயசுதா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். 

 

இந்த நிலையில் நடிகை ஜெயசுதா, தென்னிந்திய சினிமாவுக்கு இந்திய அரசாங்கத்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரணாவத்தை ஒரு உதாரணமாக குறிப்பிட்டு பேசிய ஜெயசுதா, "பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு 10 படங்கள் நடித்து முடித்த உடனே பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆனால், பல தசாப்தங்களாக திரையுலகில் பணியாற்றிய தென்னிந்திய நடிகர்களுக்கு நடிகைகளுக்கு எந்த ஒரு உரிய அங்கீகாரமும் இந்திய அரசாங்கம் கொடுக்கவில்லை. 

 

கங்கனா ரணாவத்துக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது தவறில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகைதான். ஆனால் நாங்கள் பல படங்களில் பணியாற்றியிருக்கிறோம், இருந்தும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குநர் விஜய நிர்மலாவுக்கு கூட முறையான பாராட்டு கிடைக்கவில்லை. இந்திய அரசாங்கம் தென்னிந்திய திரையுலகினரை சில சமயங்களில் பாராட்ட தவறுவது வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கங்கனா புகைப்பட சர்ச்சை - காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகத் தேசிய மகளிர் ஆணையம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
NCW demands action from Election Commission against Congress regards kangana photo issue

நடிகை கங்கனா ரணாவத் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கங்கனா ரணாவத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிரப்பட்டது.

இது சர்ச்சையான நிலையில் பதிவு குறித்து பேசிய கங்கனா, “கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீனேட், அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பலர் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுவிட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் கிசான் காங்கிரஸின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எச்.எஸ். ஆஹிர், கங்கனாவிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சுப்ரியா ஸ்ரீனேட் மற்றும் எச்.எஸ். ஆஹிர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர்களின் செயலைக் கண்டித்துள்ளது.