Skip to main content

ராஜாக்கண்ணு - பார்வதி அம்மாள் வாரிசுகளுக்கு நிதி உதவி செய்த லாரன்ஸ்

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

actor raghava lawrence donate rajakannu family

 

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் படத்தின் உண்மை கதாநாயகன் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தான் மிகவும் வறுமையில் இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாளுக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்திருந்தார். இதனிடையே, பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித் தருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறிய நிதியை அவரது வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் பார்வதி அம்மாவின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதற்காக  ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா, மற்றும் அவருடைய   மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார். அத்துடன் பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா - ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனிமேல் பாலா எந்த உதவி செய்தாலும் அதில் என் பணம் இருக்கும்” - லாரன்ஸ்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
raghava lawrence about kpy bala

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். பின்பு தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ், தனது சொந்த பணத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் என வழங்கியுள்ளார். 

சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை இரும்பேடு மேனிலைப்பள்ளியில் கழிப்பறை இன்றி சிரமப்பட்ட மாணவர்களுக்கு ராகவா லாரன்சுடன் இனைந்து பாலா கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் லாரன்சோடு பாலாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய பாலா, “கடந்த சில வருடங்களாகவே கழிவறை இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். புது கழிவறை கட்ட ரூ.15 லட்சம் ஆகும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவன் கொட்டேஷன் கொடுத்தான். என்னிடம் ரூ.5 லட்சம் தான் இருந்தது. உடனே என்னுடைய ரோல் மாடல் ராகவா லாரன்ஸ் அண்ணன் நியாபகம் வந்தது. சொன்னவுடன் இரண்டு செகண்ட் யோசித்தார். புது கழிவறையை ஷீட்டில் பண்ணலாமா காங்கிரீட்டில் பண்ணலாமா என யோசித்தார்” என்றார். பின்பு லாரன்ஸின் காலில் விழுந்து ஆசி பெற்றார். 

பின்பு ராகவா லாரன்ஸ் பேசுகையில், “பாலா சொன்னவுடன் எதுவுமே கேட்கவில்லை. ஏனென்றால், அவன் செய்வது கண்ணு முன்னாடி தெரிகிறது. இந்த வயதில் இது போல உள்ள பசங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அது நம்முடைய கடமை. அதனால் ஷீட் இல்லாமல் காங்கிரீட்டே கட்டுவோம் என முடிவெடுத்தேன். பாலா யார்கிட்டையும் எதுவும் வாங்குவது இல்லை. இனிமேல் பாலா சைக்கிள் கொடுத்தாலோ, பைக் கொடுத்தாலோ அதில் ராகவா லாரன்ஸ் பணம் உள்ளிருக்கும்” என்றார். இருவரும் ரூ.15 லட்சம் பள்ளிக்கு கழிவறை கட்ட நிதியுதவி வழங்கினார்கள். 

Next Story

விபத்தில் ரசிகர் மரணம் - அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Raghava Lawrence has decided to go to the hometown of the fans and meet them

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட வெற்றியை தொடர்ந்து, ஏகப்பட்ட படங்களில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதாக தெரியும் சூழலில், தனது ரசிகர் ஒருவர் இறந்துள்ளதாக ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அது மிகவும் மனவேதனையாக இருந்தது. அதனால் அன்று, என் ரசிகர்கள் எனக்காகப் பயணம் செய்யக் கூடாது, அவர்களுக்காகப் பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தேன். நாளை முதல் அதை தொடங்குகிறேன், முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் நடக்கிறது. நாளை சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.