Skip to main content

மாஸ்டர் சிவசங்கரின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

actor karthi have expressed their condolences Master shivashankar

 

பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் நேற்று (28.11.2021) காலமானார். சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்புக்குத் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்தவகையில், மாஸ்டர் சிவசங்கர் இறப்புக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சிவசங்கர் மாஸ்டரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகத்தான திறமை மற்றும் பல தசாப்தங்களாக இந்திய சினிமாவுக்குப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  சோனு சூட்,  பிரபு தேவா, சரத்குமார், ஆரி அர்ஜுனன், இயக்குநர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி, சேரன், நவீன் முஹம்மது அலி, நடிகைகள் காஜல் அகர்வால், நந்திதா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகராகவும், நடன இயக்குநராகவும்  பணியாற்றிய சிவசங்கர் 'மகதீரா' படத்திற்குத் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.  

Next Story

கார்த்தியின் அடுத்த படக்குழு வெளியிட்ட அப்டேட்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
karthi 26 movie update

கார்த்தி தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

இதனிடையே, நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கார்த்தியின் 26வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பூஜையில் சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கவுதம் கார்த்திக்கும் கலந்து கொண்டுள்ளார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.