Skip to main content

அஜித், விஜய் ரசிகர்களுக்கு நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்! 

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்குப் புகழ் பெற்றவர். ஏதேனும் ஒரு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்படும்போதே அங்கு தனது பேச்சு புதுமையாக, வித்தியாசமாக, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கவேண்டுமென மெனக்கிடுபவர். அவர் பிறருக்கு அளிக்கும் பரிசுகளும் அப்படித்தான் மிகுந்த சிரத்தையெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கும். இப்படி சிறிய விஷயங்கள் தொடங்கி, தான் இயக்கும் படங்கள் வரை தான் தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்து அதில் வெற்றி பெற்றவர் பார்த்திபன்.

 

parthiban



'புதியபாதை' தொடங்கி தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வரை தான் இயக்கிய படங்களில் அந்தந்த காலத்தில் புதுமையான பல விஷயங்களை முயன்ற பார்த்திபன், அந்த புதுமை முயற்சிகளாலேயே நல்ல வெற்றிகளையும் பேரையும் பெற்றவர். அதே நேரம், அதனாலேயே மிகப்பெரிய தோல்விகளை அடைந்து பொருளையும் இழந்திருக்கிறார். இடையிடையே பிறர் படங்களில் நடித்தாலும் மீண்டும் மனம் தளராமல் தனது முயற்சியை தொடர்வார். அவர் கடைசியாக இயக்கிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெற்றி பெறவில்லை. அதற்கு முந்தைய படமான 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். உலகிலேயே முதல் முறையாக ஒரே ஒருவர் நடித்து அவரே இயக்கியுள்ள படமாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' வெளிவர இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலரை வெளியிடும்போது அதனுடன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.


வீடியோவில் பார்த்திபன் பேசியது... "சூப்பர்ஸ்டாரின் தர்பார், உலகநாயகனின் இந்தியன் 2, மிஸ்டர் விஜய்யின் பிகில், மிஸ்டர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை... இப்படி பிரமாண்டமான படங்கள் தயார் நிலையில் இருக்கும்போது ஒரே ஒருத்தர் நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படமும் வெளிவர இருக்கிறது. படம் பார்த்துட்டு மூணாவது நாளாவது நாள் நல்லா இருக்கு என்று சொல்வதற்கு பதிலாக முதல் நாளே ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஒரே ஆள் இயக்கி நடித்ததால் மட்டுமே இதை நான் விருதுகளுக்கு அனுப்புகிறேன். ஆனால், இது ஜனரஞ்சமான ஒரு படமாகத்தான் இருக்கும். உலகில் இதுவரை பனிரெண்டு படங்கள் மட்டுமே ஒருவர் நடித்த படங்கள். அவற்றை விட என் படத்தில் என்ன சிறப்பு என்றால் நானே இப்படத்தை இயக்கியிருப்பதுதான். படத்தைப் பார்த்த பெண்கள் இறுதியில் கண்ணீரை அடக்கமுடியவில்லை என்றார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான உங்களுடன் கனெக்ட் ஆகக்கூடிய ஒரு படமாக இது இருக்கும். என் படத்தை நானேதான் கூவி விற்க வேண்டும். அந்தக் கூவலின் ஒரு பகுதிதான் இந்த ட்ரெயிலர்."

பார்த்திபனின் இந்த முயற்சி திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் படம் மக்களின் பார்வைக்கு வெளிவர இருக்கிறது.

 

 

           

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.