Skip to main content

ஏன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ளவில்லை? நடிகர் அசீம் விளக்கம்

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

azeem

 

 

தமிழ் பிக்பாஸ் 4 போட்டி ஒளிபரப்பாகி வருகிறது. மூன்று சீஸனையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்.  

 

இந்தப் போட்டியில் ஷிவானியுடன் ‘பகல் நிலவு’ சீரியலில் நடித்திருந்த நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக செல்ல இருப்பதாகவும் அதற்காக அவர் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சுச்சித்ரா வெளியாகும் வாரத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அவர் உள்ளே செல்லவில்லை.

 

இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் ஒரு உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் அம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆயிரம் கோடி கேட்ட பிரபல நடிகர்; அதிர்ச்சியில் டிவி நிர்வாகம்

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

salman khan charge over rs1000 crore biggboss

 

இந்தியா முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதனால் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதலில் இந்தியில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்நது பிற மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் சல்மான் கான் இந்தியில் கடந்த 13 ஆண்டுகால பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் 16 வது சீசன் தொடங்கவுள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் 16 வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக டிவி நிர்வாகத்திடம் இது வரை தனக்கு வழங்கப்பட்டு வந்த சமபளத்தை மேலும் 2 மடங்காக உயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற சீசனில் சல்மான்கானுக்கு  சம்பளமாக ரூ.350 கோடி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதை உயர்த்தி ரூ.1050 கோடி கேட்டுள்ளதால் டிவி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளதாம். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெறுவதால் அவர் கேட்ட தொகையை டிவி நிர்வாகம் அளிக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.