Skip to main content

"அவர் எழுப்பிய குரலும், சிந்தனைகளும் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது" - நடிகர் ஆரி உருக்கம்!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

bsgsbsd

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்று வந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் 'பிக்பாஸ் 4' புகழ் ஆரி அர்ஜுனன் மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"தன் தேவைக்காக அல்லாமல் மக்களின் தேவைக்காக குரல் எழுப்பிய மனிதன் டிராபிக் ராமசாமி அவர்கள். பூத உடல் மறைந்து போகலாம். ஆனால் அவர் எழுப்பிய குரலும், அவர் எழுப்பிய சிந்தனைகளும் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.

Next Story

ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
lakshmi menon to pair with aari arjunan in next movie

ஆரி அர்ஜுனன் ஹீரோவாக 2018ஆம் ஆண்டு வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். பின்பு உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது சமீபத்தில் சேரன் இயக்கத்தில் வெளியான ஜர்னி வெப் தொடரின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே ஹன்சிகா நடிக்கும் மேன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதி பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ராஜசேகர பாண்டியன் இயக்கும் இப்படத்தில் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது முதல் படமாக இப்படத்தைத் தயாரிக்கிறது. மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

லட்சுமி மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். அப்படம் சரியாகப் போகவில்லை. இப்போது யோகிபாபுவின் வானவன், ஆதியின் சப்தம் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.