Skip to main content

நடிகர் பெயரில் பண மோசடி; ஒரு பெண்ணிடம் 2 சகோதரர்கள் கைவரிசை

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

2 brothers in money fraud using actor dharshan photo fake id

 

'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்குத் தம்பியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் தர்ஷன். பின்பு 'கனா' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்பு 'தும்பா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் அஜித்தின் 'துணிவு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 

 

ad

 

இந்த நிலையில் இவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணமோசடி நடந்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தர்ஷன் பெயரில் போலி ஐடி வைத்திருந்த ஒரு நபர் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். பின்பு அந்த பெண்ணின் செல்போன் என்னை வாங்கி அவருடன் வாட்ஸ் ஆஃப் முலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருங்கி பழகி வந்துள்ளார். 

 

அந்த பெண்ணின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளார். அதை வைத்து 2 லட்சம் ரூபாய் வரை அந்த பெண்ணிடம் பணம் பறித்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். 

 

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த மர்ம நபர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அலாவுதீன் (27) மற்றும் வாகித் (26) ஆகிய இருவரும் என தெரியவந்துள்ளது. இருவரும் சகோதரர்கள் எனவும் ஒரு ஐடி மூலம் இருவரும் அந்த பெண்ணுடன் பழகி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்பு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன்னிப்பு கேட்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம்” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தர்ஷன்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
kannada actor dharshan women organization issue

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தர்ஷன். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடந்த நிகழ்ச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் தர்ஷன் பேசியுள்ளதாக கவுடாதியர சேனே என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் காதலி என சொல்லப்படும் பவித்ரா கவுடா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சிலர் பேசி வந்த நிலையில், அதற்கும் விளக்கமளிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த புகார் மனுவில் கவுடாதியர சேனே அமைப்பு குறிப்பிட்டிருப்பதாவது, “தர்ஷன் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். திரையில் எந்தளவிற்கு நல்லவராக இருக்கிறாரோ அதையே நடைமுறைப்படுத்த வேண்டும். ரசிகர்களிடம் பகிரங்கமாக பேசும்போது இதுபோன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்தினார். அதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும். மேலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கும் தெரியும். நடிகர் தனது தவறை அறிந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவர் அதை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் நாங்கள் மகளிர் ஆணையத்தை அணுக முடிவு செய்தோம். இதை அவர் ஏற்கவில்லை என்றால் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மிக்ஜாம் புயல் - களத்தில் இறங்கிய ‘நாடு’ படக்குழு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

naadu movie team helped affected peoples by cyclonemichaung

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு நாடு திரைப்படத்தின் இயக்குநர் சரவணன் மற்றும் நடிகர் தர்ஷன் ஆகியோர் படகு மூலம் சென்று உணவு மற்றும் அடிப்படை தேவையான பொருட்களை வழங்கினார்கள். அப்போது அவர்கள் நாடு படத்தின் தலைப்பு பொருந்திய டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர். சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் நாடு. சக்ரா மற்றும் ராஜ் தயாரித்திருந்த இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருந்தார்.