Skip to main content

முதலில் எஸ்.ஏ.சி, அப்புறம் பாக்யராஜ், மறுநாள் பாரதிராஜா... ரமேஷ் கண்ணா இல்லத் திருமண நிகழ்வில் குவிந்த இயக்குனர்கள்

Published on 02/12/2018 | Edited on 02/12/2018

 

 

தமிழ் திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கண்ணாவின் மூத்த மகன் ஜஸ்வந்த் கண்ணன் - பிரியங்கா திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவர்களது திருமணம் இன்று காலை நடைபெற்றது. தமிழ் சினிமாவில் ‘ஆண்பாவம்’ காலம் தொடங்கி, ‘சாமி ஸ்கொயர்’ வரை இன்றும் ரமேஷ் கண்ணா ஆக்டிவ்வாக இயங்கி வருவதால் பல இயக்குனர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இவருக்கு எந்த குறையுமே இல்ல" - மாரிமுத்து குறித்து பகிர்ந்த ரமேஷ் கண்ணா

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

ramesh kann about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நக்கீரன் சார்பாக நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் தொலைபேசி வாயிலாக மாரிமுத்துவின் இரங்கல் குறித்து கேட்டறிந்தோம். அபோது மாரிமுத்துவுடன் நட்பு பற்றி பேசிய அவர், "ஐஸ்வர்யா ராஜேஷ்,  நான், மாரிமுத்து சார் எல்லேரும் லட்சுமி நாராயணன் டைரக்ட் செய்யும் படத்தில் நடித்தோம். இரவு பகலாக ஷூட்டிங் நடத்தினோம். அதுவும் அடர்ந்த காட்டுக்குள்ள. உற்சாகமாக இருப்பார். நானெல்லாம் டயர்ட் ஆகிட்டாலும் கூட உற்சாகப்படுத்துவார். ஆரோக்கியமான உடல். ஸ்ட்ராங்கான வாய்ஸ். 3 மணி, 4 மணி வரையும் அதே உற்சாகத்துடன் நடிப்பார். அப்படி ஒரு நடிகர். 

 

அவர் திடீர்னு மறைந்திருப்பது பெரிய ஷாக். ஏன்னா... சாதாரணமா ஒருவர் உடம்பு சரியில்லாமல் இறந்திட்டா சரி ஓகே-னு சொல்லலாம். ஆனால் இவருக்கு எந்த குறையும் இல்ல. உடம்பில் எந்த பிரச்சனையும் கிடையாது. அற்புதமான ஒரு நடிகர். அற்புதமான மனிதர். அவரை இழந்தது கலையுலகத்திற்கு இறப்போ இல்லையோ, என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எனக்குமான ஒரு இழப்பாக இருக்கு. 

 

நிஜ வாழ்க்கையில் ரொம்ப தமாஷா பேசுவாரு. கருத்துக்களை ஸ்ட்ராங்காக பேசுபவர். அவருக்கு இது போல் நடப்பதற்கு வாய்ப்புகளே கிடையாது. அனால் அவர் மறைந்திருப்பது, என்ன சொல்றது. வார்த்தைகளே இல்லை. எப்போதாவது சந்திக்கிற மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் அது பெரிய ஷாக் இருக்காது. சமீபத்தில் சந்தித்த மனிதர்கள் இறக்கும் பொழுது தான் ரொம்ப பெரிய சங்கடமா இருக்கு. 

 

மயில்சாமி இறப்பதற்கு 2 நாள் முன்னாடி அவரிடம் பேசினேன். தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடமும் அப்படி தான். 1 வாரம் முன்னாடி பேசியிருப்பேன். இவர்களெல்லாம் நான் அடிக்கடி தொடர்புகொள்கிற மனிதர்கள். இவர்கள் திடீர்னு இறப்பது ஷாக்காக இருக்கு. மனசுக்குள் ஒரு திகில் வருகிறது" என்றார். 

 

 

Next Story

“நாங்கெல்லாம் இருக்கோம்...” - ஆந்திரா தயாரிப்பாளருக்கு தைரியமூட்டிய பாக்யராஜ்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 Yennai Maatrum Kadhale Audio Launch Bhagyaraj Speech

 

சென்னையில் நேற்று (08/11/2022) நடைபெற்ற 'என்னை மாற்றும் காதலே" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், திரைப்பட இயக்குநருமான பாக்யராஜ், "இந்த ஃபங்ஷன் நடக்கறதுல கொஞ்சம் டவுட் இருந்துச்சு. ஏன்னா, கொஞ்சம் நிறைய இடைஞ்சல்லாம் வந்து புரொடியூசரும் நானும், பண்ண முடியுமா? முடியாதா? கண்கலங்கி உட்கார்ந்திட்டு இருந்தாரு புரொடியூசர். அப்ப எனக்கு டக்குனு மைண்டுக்கு வந்தது பண்ணணுமேனு அப்படினு சொல்லும் போது, விஜய் முரளிக்கு மட்டும் போன் அடிச்சேன். இந்த மாதிரி ஒரு ப்ராப்ளம். கொஞ்சம் கரெக்ட் பண்ணி எப்படியாவது உடனடியா ஃபங்ஷன பண்ணணும் அப்படினேன். அப்புறம் உடனே எல்லாருக்கும் போன் அடிச்சி, அப்புறம் டைமண்ட் பாபு கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசுங்கன்னு சொல்லி, அவருக்கும் நான் போன் பண்ணி பேசினேன். 

 

நான் வந்து அவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்ட காரணம் என்னனா, நம்ம தமிழ்நாட்டுல இருக்கோம். நம்மல நம்பி ஆந்திராவில இருந்து வந்து ஒரு புரொடியூசர் படம் எடுக்கும் போது, அவருக்கு நாம என்ன செய்யறோம் என்பது முக்கியம் இல்லையா. எவ்வளவு தூரம் கை கொடுத்து நாம அரவணைச்சு போகணும். அவர கஷ்டப்படுத்துறமே அப்படிங்கறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. 

 

நடிகை துளசி ரொம்ப பீல் பண்ணி பேசினாங்க. எனக்கு ரொம்ப அது டச்சிங்கா இருந்துச்சு. என்னனா, இந்த புரொடியூசர் எவ்வளவு கஷ்டப்பட்டு, பொண்ணு கல்யாணத்துக்காக வச்சிருந்த பணத்தை... விஷப்பரீட்சையான சமாச்சாரம். அதை அவரு செஞ்சிருக்கவே கூடாது. ஆனா தெரிஞ்சோ தெரியாமையோ அவர் ஏற்கனவே புரொடக்சஷன் மேனேஜர் வேலை பார்த்துருக்காரு. அவர் எப்படி, இப்படி ஏமாந்து, உள்ள வந்து கால வச்சாருனு எனக்கு புரியல. இரண்டு லாங்குவேஜ்ல படம் பண்ணிருக்காரு. 

 

செம்பினு சொல்லிட்டு ஒரு படம். அந்த படம் ஆடியோ ஃபங்ஷனுக்கு போயிருந்தேன். ஃபர்ஸ்ட் ஷாட் போட்டதுமே கிளாப்ஸ் அடிச்சாங்க. ஏனா போட்டோகிராஃபி ஃபர்ஸ்ட் ஷாட்டு அவ்வளோ அழகா இருந்தது. இதிலும், அதே அளவு கைத்தட்டுற அளவுக்கு ஃபர்ஸ்ட் ஷாட் எடுத்ததுமே போட்டது. அந்த லொக்கேஷன் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. ஒரு பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட பரவால, கேமராமேன், டைரக்டர் என்ன லைக் பண்றாங்களோ எடுக்கட்டும். அப்படினு சொல்லி என்ன செலவானாலும் பரவாலனு சொல்லி, கேரளா, அங்க, இங்கனு எல்லா இடத்துக்கும் சுத்தி இந்த படத்துக்காக அவரு வந்து செலவு பண்ணிருக்காரு. 

 

நான் பெருசா இதுல ஒன்னும் பண்ணல. என்னை நடிக்கணும்னு சொன்னாங்க. சரி அப்படினு ஒத்துக்கிட்டு, இரண்டு நாள் தானே நடிக்கணும், அப்படினாங்க. ஒரு நாள் இங்க எடுத்தாங்க. ஒரு நாள் பாண்டிச்சேரி போய் எடுத்தாங்க. இப்ப நினைச்சு பார்க்கறேன் நானு. பாண்டிச்சேரில என்னோட சூட்டிங்கோட முடியுது. பூசணிக்காய் உடைக்கிறாங்க. நைட் இரண்டு, மூணு மணிக்கு வந்து படுத்து காலைல 11 மணிக்கு எழுந்திருக்கும் போது தான் நம்ம சின்னக்கலைவாணர் இறந்துட்டாருனு போன் வருது. அப்புறம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் எதோ புறப்பட்டேன். 

 

எதுக்கு சொல்ல வரேன்னா, அன்னையில் இருந்து படம் முடிஞ்சி போச்சு. இன்னைக்கும் வரைக்கும் பாருங்க. இவ்வளவு நாள் ஆயிருக்கு. இன்னைக்கு கரெக்ட்டா கிரகணத்துக்குள்ள வந்து மாட்டிருக்காரு. பரவால கிரகணம் 05.11 ஓட விலகிடுச்சி. உங்களுக்கும் கிரகணம் விலகுனதுனு சொல்லி நினைச்சிக்கலாம். துளசி அவ்வளவு தூரம் வார்ன் பண்ணி சொல்லியும் கூட அவர் அறியாமலே எப்படி எப்படியோ செலவ இழுத்துட்டு போயிருக்கு. இருந்தாக்கூட, அவர் எப்படியாவது கரையேறனும்னு சொல்லிட்டு படம் நல்லா வரணும் அப்படினு சொல்லிட்டு பிரார்த்திப்போம். 

 

ஆனால், அப்படி ஏதாவது கையக் கடிக்கிற மாதிரி ஏதாவது வந்தாக் கூட, அவங்க சொன்னாங்களே உங்க பொண்ணு கல்யாணம் நல்லா நடக்கணும்னு. அதுக்கு நாங்களெல்லாம் தமிழ்ல எதாவது பண்ணி உங்களுக்கு ஏதாவது பண்றோம். அதனால நீங்க நம்பிக்கையோடு இருக்கலாம்." என்றார்.